.

Pages

Monday, July 29, 2019

அதிராம்பட்டினத்தில் மகப்பேறு மருத்துவர் டாக்டர் கெளசல்யா ராணி அரசுப் பணி நிறைவு விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை.29
அரசு மகப்பேறு மருத்துவராக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருபவர் டாக்டர். கெளசல்யா ராணி. இவர், அரசு மருத்துவப் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், இவரது மருத்துவச் சேவையைப் பாராட்டி, பணி நிறைவு பாராட்டு விழா அதிராம்பட்டினத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஏ.அன்பழகன் தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கினார். டாக்டர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக, அதிராம்பட்டினம் மருத்துவர்கள் டாக்டர் ஹக்கீம், டாக்டர் எஸ். ஹாஜா முகைதீன், டாக்டர் எச்.இர்ஷத் நஸ்ரின், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர் சீனிவாசன், டாக்டர் கார்த்திகேயன், டாக்டர் ஷெரீன் பேகம், டாக்டர் ஷர்மிளா, டாக்டர் கலைவாணி, பட்டுக்கோட்டை மருத்துவர்கள் டாக்டர் கண்ணன், டாக்டர் நியாஸ் அகமது, டாக்டர் நியூட்டன், டாக்டர் ராஜகோபால், டாக்டர் சங்கரவடிவேல், டாக்டர் சதாசிவம், டாக்டர் பாஸ்கரன்,டாக்டர் சுப்ரமணியன், டாக்டர் தேவி ராஜேந்திரன், டாக்டர் மகாலிங்கம், டாக்டர் விஜயலட்சுமி, டாக்டர் செளந்தர்ராஜன், டாக்டர் அறிவானந்தம், டாக்டர் பந்மாநந்தன், டாக்டர் புகழேந்தி, டாக்டர் அருண்குமார், டாக்டர் பிரசன்னா, டாக்டர் கலைச்செல்வம், டாக்டர் மருதுதுரை, டாக்டர் சங்கிதா உட்பட அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை செவிலியர்கள், லேப் பணியாளர்கள், ஊர் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.