.

Pages

Friday, July 5, 2019

இந்தியாவின் முதலாவது ஹஜ் யாத்திரைக்குழுவினருக்கு மதினாவில் சிறப்பான வரவேற்பு (படங்கள்)

அதிரை நியூஸ்; ஜூலை 05
இந்திய ஹஜ் கமிட்டி ஏற்பாட்டின் கீழ் டெல்லியிலிருந்து விமானம் மூலம் புறப்பட்ட முதலாவது புனித ஹஜ் யாத்திரை குழுவினர் 419 பேர் (நேற்று) வியாழன் காலையில் புனித மதினாவின் முஹமது பின் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினர். இவர்கள் அனைவரையும் இந்தியத் தூதர் டாக்டர். அவ்ஸீப் சயீத், கவுன்சலர் ஜெனரல் முஹமது நூர் ரஹ்மான் ஷேக், ஹஜ்ஜுக்கான சிறப்பு கவுன்சலர் Y. சாபிர் ஆகியோர் மதினா விமான நிலையத்தில் அன்புடன் வரவேற்றனர்.

இந்த முதலாவது குழுவினர் 8 நாட்கள் மதினாவில் தங்கியிருந்த பின் ஜூலை 12 ஆம் தேதி புனித ஹஜ் கிரிகைகளை நிறைவேற்றுவற்காக புனித மக்காவுக்கு புறப்பட்டுச் செல்வர்.

இந்தியாவிலிருந்து மதினா வந்திறங்கும் யாத்ரீகர்கள் ஹஜ் கடமைகளை நிறைவேற்றிய பின் ஜித்தா விமான நிலையம் வழியாக ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 24 வரை இந்தியாவிற்கு திருப்பியனுப்பப்படுவர்.

இதேபோல் இந்தியாவிலிருந்து ஜித்தாவிற்கு ஜூலை 20 முதல் புனித பயணிகள் வருகை தரவுள்ளனர். இந்தியாவிலிருந்து ஜித்தாவிற்கான முதலாவது விமானம் அஹமதாபாத்தில் இருந்து ஜூலை 20 அன்று புறப்படவுள்ளது. அதேவேளை தனியார் ஹஜ் சேவை நிறுவனங்கள் மூலம் வருகை தரும் ஹஜ் யாத்ரீகர்கள் (நேற்று) வியாழன் முதல் ஜித்தா விமான நிலையத்தில் வந்திறங்க துவங்கிவிட்டனர்.

இந்திய ஹஜ் கமிட்டி மூலம் ஜித்தா வந்திறங்கும் புனித யாத்திரை குழுவினர் ஹஜ் கடமைகளை நிறைவேற்றிய பின் ஆகஸ்ட் 19 முதல் புனித மதினா நகருக்கு அனுப்பி வைக்கப்படுவர். மதினாவில் 8 தினங்கள் தங்கிய பின் மதினா விமான நிலையம் வழியாக இந்தியாவிற்கு படிப்படியாக திருப்பி அனுப்பப்படுவர்.

இந்தியாவிலிருந்து ஹஜ் கமிட்டி மூலம் இந்த வருட புனித ஹஜ் கடமைகளை நிறைவேற்ற 140,000 பேர் வருகை தரவுள்ளனர். இவர்களில் 63,000 பேர் மதினா விமான நிலையம் வழியாகவும் எஞ்சிய 77,000 பேர் ஜித்தா விமான நிலையம் வழியாக ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 5 வரை வந்திறங்க உள்ளனர்.

புனித ஹஜ் கிரிகைகள் எதிர்வரும் ஆகஸ்ட் 8 முதல் 14 வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.