அதிராம்பட்டினம், ஜூலை 11
காதிர் முகைதீன் கல்லூரி வரலாற்றுத்துறை சார்பில், உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எம். முகமது முகைதீன் தலைமை வகித்தார். வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர் என். நத்தர் பாவா முன்னிலை வகித்தார். கல்லூரி பேராசிரியை எம். பரிதா பேகம் வரவேற்றுப் பேசினார்.
சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகச் சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறைத் தலைவர் சி. சிவசுப்பிரமணியன் கலந்துகொண்டு, மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் இடர்பாடுகள், உணவு பற்றாக்குறை, இடப்பற்றாக்குறை, சுற்றுச்சூழல் பாதிப்பு, நீர் நிலை பாதிப்பு ஆகியன குறித்து ஒளித்திரை மூலம் விளக்கிப்பேசினார். நிகழ்ச்சிகளை பேராசிரியை பி. பாலம்மாள் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி முடிவில், பேராசிரியை பி. விஜயலட்சுமி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர் எஸ்.அன்பழகன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
காதிர் முகைதீன் கல்லூரி வரலாற்றுத்துறை சார்பில், உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எம். முகமது முகைதீன் தலைமை வகித்தார். வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர் என். நத்தர் பாவா முன்னிலை வகித்தார். கல்லூரி பேராசிரியை எம். பரிதா பேகம் வரவேற்றுப் பேசினார்.
சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகச் சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறைத் தலைவர் சி. சிவசுப்பிரமணியன் கலந்துகொண்டு, மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் இடர்பாடுகள், உணவு பற்றாக்குறை, இடப்பற்றாக்குறை, சுற்றுச்சூழல் பாதிப்பு, நீர் நிலை பாதிப்பு ஆகியன குறித்து ஒளித்திரை மூலம் விளக்கிப்பேசினார். நிகழ்ச்சிகளை பேராசிரியை பி. பாலம்மாள் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி முடிவில், பேராசிரியை பி. விஜயலட்சுமி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர் எஸ்.அன்பழகன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.