தஞ்சாவூர், ஜூலை 07
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் ஜூலை 13-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு அறிவுறுத்தலின்படியும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படியும் தேசிய மக்கள் நீதிமன்றம் ஜூலை 13-ம் தேதி நடைபெறவுள்ளது. இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட நீதிமன்றத்தில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மக்கள் நீதிமன்றத்தின் மூலம் அனைத்து நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிப்பது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான வி. சிவஞானம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன், மாவட்டச் சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சார்பு நீதிபதியுமான பி. சுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் ஜூலை 13-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு அறிவுறுத்தலின்படியும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படியும் தேசிய மக்கள் நீதிமன்றம் ஜூலை 13-ம் தேதி நடைபெறவுள்ளது. இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட நீதிமன்றத்தில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மக்கள் நீதிமன்றத்தின் மூலம் அனைத்து நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிப்பது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான வி. சிவஞானம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன், மாவட்டச் சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சார்பு நீதிபதியுமான பி. சுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.