.

Pages

Sunday, July 28, 2019

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் நடத்திய பேச்சுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 28
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில், காமராஜர் 117-வது பிறந்த தின விழா சிறப்பு பேச்சுப் போட்டி, ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் இன்று (ஜூலை 28) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் எம். அப்துல் ஜலீல் தலைமை வகித்தார். செயலாளர் சேக்கனா எம்.நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம். முகமது முகைதீன், முன்னாள் தலைவர் என்.ஆறுமுகச்சாமி, இணைச் செயலாளர் எம். முகமது அபூபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 'ஏழைகளின் கல்விக்கண் திறந்த காமராஜர்', 'காமராஜர் காண விழைந்த இந்தியா', தூய்மை, எளிமை, நேர்மை, கொள்கைப்பிடிப்பு இவற்றில் மொத்த உருவமே காமராஜர்' ஆகிய தலைப்புகளின் கீழ், கீழோர் பிரிவில் 6,7,8,9 ஆகிய வகுப்புகளுக்கும், மேலோர் பிரிவில் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டன.

போட்டியை லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் தொடங்கி வைத்துப் பேசினார். இதில், அதிராம்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளிகள், ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, பிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளி, பட்டுக்கோட்டை புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 23 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் எஸ்.பி கணபதி  காமராஜரின் சாதனைகள், தொண்டு குறித்துப் பேசினார்.

போட்டி நடுவர்களாக, பேராசிரியர் எம். ஏ முகமது அப்துல் காதர், பள்ளி ஆசிரியைகள் எம். தயாநிதி, ஆர். உஷா ஆகியோர் பொறுப்பேற்று நடத்தினர்.

போட்டி முடிவில், கீழோர் பிரிவில், மாணவர்கள் கே.விஷாலினி, பி.வீரமணி, எஸ். திவ்யதர்ஷினி ஆகியோரும், மேலோர் பிரிவில், அ.அருள்தேவி, சு.பஹ்மியா, அ.முகேஷ் ஆகியோரும் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். இவர்களுக்கு நினைவுப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், போட்டியில் பங்குபெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறப்பு அழைப்பாளரக கலந்துகொண்ட சமூக ஆர்வலர் எஸ்.ஏ இம்தியாஸ் அகமது பரிசினை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். முடிவில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கச் செயலாளர் எம்.நிஜாமுதீன் நன்றி கூறினார்.

விழாவில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.