அதிராம்பட்டினம், ஜூலை 07
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் இளங்கலை ஹோம் சயின்ஸ் (மனையியல்) பாடப்பிரிவு அறிமுகம் மற்றும் முதலாம் ஆண்டில் இணைந்த மாணவிகளுக்கான வரவேற்பு மற்றும் வகுப்பு தொடக்க விழா நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எம்.முகமது முகைதீன் தலைமை வகித்தார். கல்லூரி துணை முதல்வர் என்.ஏ முகமது பாருக் முன்னிலை வகித்தார்.
கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் ஹோம் சயின்ஸ் பாடப்பிரிவை தொடங்கி வைத்து பேசியது;
'மனையியல் பாடத்திட்டத்தை நன்கு கற்பதன் மூலம் பெண்கள்
குடும்பப் பொறுப்பு, பணிப் பொறுப்பு, சமுதாயப் பொறுப்பு ஆகியவற்றில் சிறப்பான இலக்கை அடைய முடியும். சிறந்த கலாசாரத்தையும், பண்பாட்டையும் மேம்படுத்தும் வகையில் மனையியல் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது' என்றார். பின்னர், கல்லூரியில் நவீன முறையில் புதிதாக கட்டப்பட்ட மனையியல் பயிற்சிக்கூடத்தை மாணவிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
விழாவில், கல்லூரிப் பேராசிரியை ஏ. ஆர்த்தி, 'மனையியல் கற்பதன் நோக்கம்' என்ற தலைப்பிலும், பேராசிரியை ஆரிபா, 'உணவு மற்றும் ஊட்டச்சத்து' என்ற தலைப்பிலும் விளக்கிப் பேசினர்.
முன்னதாக, பேராசிரியர் மேஜர் பி.கணபதி வரவேற்றுப் பேசினார். பேராசிரியைகள் என். சித்ரா, கானப்பிரியா ஆகியோர் தொகுத்து வழங்கினர். விழா முடிவில், பேராசிரியை எம்.சுமதி நன்றி கூறினார். விழாவில், கல்லூரி பேராசிரியர்கள் அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் இளங்கலை ஹோம் சயின்ஸ் (மனையியல்) பாடப்பிரிவு அறிமுகம் மற்றும் முதலாம் ஆண்டில் இணைந்த மாணவிகளுக்கான வரவேற்பு மற்றும் வகுப்பு தொடக்க விழா நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எம்.முகமது முகைதீன் தலைமை வகித்தார். கல்லூரி துணை முதல்வர் என்.ஏ முகமது பாருக் முன்னிலை வகித்தார்.
கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் ஹோம் சயின்ஸ் பாடப்பிரிவை தொடங்கி வைத்து பேசியது;
'மனையியல் பாடத்திட்டத்தை நன்கு கற்பதன் மூலம் பெண்கள்
குடும்பப் பொறுப்பு, பணிப் பொறுப்பு, சமுதாயப் பொறுப்பு ஆகியவற்றில் சிறப்பான இலக்கை அடைய முடியும். சிறந்த கலாசாரத்தையும், பண்பாட்டையும் மேம்படுத்தும் வகையில் மனையியல் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது' என்றார். பின்னர், கல்லூரியில் நவீன முறையில் புதிதாக கட்டப்பட்ட மனையியல் பயிற்சிக்கூடத்தை மாணவிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
விழாவில், கல்லூரிப் பேராசிரியை ஏ. ஆர்த்தி, 'மனையியல் கற்பதன் நோக்கம்' என்ற தலைப்பிலும், பேராசிரியை ஆரிபா, 'உணவு மற்றும் ஊட்டச்சத்து' என்ற தலைப்பிலும் விளக்கிப் பேசினர்.
முன்னதாக, பேராசிரியர் மேஜர் பி.கணபதி வரவேற்றுப் பேசினார். பேராசிரியைகள் என். சித்ரா, கானப்பிரியா ஆகியோர் தொகுத்து வழங்கினர். விழா முடிவில், பேராசிரியை எம்.சுமதி நன்றி கூறினார். விழாவில், கல்லூரி பேராசிரியர்கள் அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.