.

Pages

Monday, July 22, 2019

சவுதியில் ஹஜ் சேவைகளுக்காக 10,000 சிறப்பு ஊழியர்கள் நியமனம்!

அதிரை நியூஸ்: ஜூலை 22
ஹஜ் சேவைகளுக்காக 10,000 சிறப்பு ஊழியர்கள் நியமனம் மற்றும் சிறப்பு ஏற்பாடுகள்

நடப்பு ஹஜ் காலத்தில் ஹஜ் யாத்ரீகர்களின் பல்வேறு சேவைகளுக்காக 10,000 ஆண், பெண் ஊழியர்கள் புனித இரு ஹரம் ஷரீஃப் பள்ளிகளின் நிர்வாகத்தின் சார்பாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் புனிதப் பள்ளிகளின் சார்பாக நடைபெறும் 140 வகையான சேவைகளில் ஈடுபடுவர். குறிப்பாக, நிர்வாகப் பணிகள், அல்லாஹ் விருந்தினர்களுக்கான சேவைகள், வழிகாட்டல், பொறியியல், தொழில்நுட்பம், ஊடகத் தொடர்பு போன்ற பலவற்றுடன் மார்க்க அறிஞர்களின் பல்வேறு உலக மொழிகளிலான ஹஜ் வழிகாட்டல் வகுப்புகள்,  வழிகாட்டு புத்தகங்கள், துண்டு பிரசுரங்கள் வழங்குதல் போன்ற பணிகளிலும் ஈடுபடுவர்.

ஹரம் ஷரீஃபில் புதிதாக விஸ்தரிக்கப்பட்ட தவாப் சுற்றுப்பகுதிகளின் பயனாக ஒரு மணிநேரத்தில் சுமார் 107,000 யாத்ரீகர்கள் தவாப் செய்ய முடியும்.

மக்கா, மதினா ஆகியவற்றில் உள்ள 2 புனிதப் பள்ளிகளிலும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ உரைகள் உடனடியாக குறைந்தது 10 உலக மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படுவதுடன் சைகை மொழியிலும் விளக்கப்படும்.

இரு புனிதப்பள்ளிகளின் முற்றப்பகுதிகளிலும் 8441 குளியலறை வசதியாக உள்ளன. 6000 ஒழுச் செய்யும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

நடப்பு ஹஜ் காலம் மிகவும் சூடான கோடைக்காலமாக இருப்பதால் மயக்கம், அழுத்தம், வியர்வை அதிகம் வெளியேறுவதால் ஏற்படும் மூர்ச்சை உள்ளிட்ட பல வெயிலோடு தொடர்புடைய பாதிப்புக்கள் ஏற்படும் என்பதால் இவற்றிற்காக உடனடி சிகிச்சைகள் வழங்குவதற்கான அனைத்து மருத்துவ முன்னேற்பாடுகளும் சுகாதார அமைச்சகத்தின் உதவியுடன் செய்யப்பட்டுள்ளன. சவுதி வானிலை மையமும் இந்த வருட ஹஜ் காலத்தின் போது பகலில் மிகவும் சூடாகவும். இரவில் மிதமான சூடும் நிலவும் என முன்னறிவிப்பு செய்துள்ளது.

இரு புனிதப் பள்ளிகள் மற்றும் புனிதத் தலங்களில் தண்ணீரை விசிறியடிக்கும் மின்விசிறிகள் ஏராளமாக நிறுவப்பட்டுள்ளது. அனைத்து உயர்தர வசதிகளுடன் கூடிய 80 ஆம்புலன்ஸ், 100 மினி ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இரு புனிதப் பள்ளிகளின் நிர்வாகத் தலைமையின் ஏற்பாட்டின் கீழ் செய்யப்படும் இந்த சேவைகள் அனைத்தும் 6வது ஆண்டாக Serving the pilgrims and visitors is a medal of honor for us என்ற வெற்றிகரமான இணைப்புத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என இரு புனிதப் பள்ளிகளின் நிர்வாகத் தலைவர் அப்துல் ரஹ்மான் அல் சுதைஸி அவர்கள் தெரிவித்தார்கள்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.