அதிரை நியூஸ்: ஜூலை 19
நியூஸிலாந்து பள்ளிவாசலில் கொல்லப்பட்டவர்களின் உறவுகள் ஹஜ் செய்ய சவுதி மன்னர் ஏற்பாடு
நடப்பு 2019 வருடம் மார்ச் 15 ஆம் தேதியன்று நியூஸிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் நகரின் 2 மஸ்ஜிதுகளில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு கூடியிருந்த முஸ்லீம்கள் மீது வலதுசாரிகள் எனப்படும் மதத்தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் ஷஹீதானார்கள் மேலும் சுமார் 49 பேர் பலத்த காயமடைந்தனர் என்பதையும் அறிவோம்.
இத்துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் இரத்த உறவுகள் சுமார் 200 பேரை சவுதி மன்னரின் விருந்தினர்கள் என்ற திட்டத்தின் கீழ் ஹஜ் செய்திட சவுதி மன்னர் ஸல்மான் அவர்களின் சொந்த செலவில் ஹஜ் கடமைகளை நிறைவேற்றிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை உடனே துவங்குமாறு நியூஸிலாந்தில் உள்ள சவுதி தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் ஹஜ்ஜிற்கான வாய்ப்பு பயங்கரவாத வாதத்தால் உயிரிழப்புகளை சந்தித்த உறவுகளுக்கு மன ஆறுதலாக அமையும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் வழமைபோல் 2000 பாலஸ்தீன உயிர் தியாகிகளின் உறவினர்களும், 72 உலக நாடுகளிலிருந்து 1300 பேரும் மன்னரின் சார்பாக இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றவுள்ளனர்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
நியூஸிலாந்து பள்ளிவாசலில் கொல்லப்பட்டவர்களின் உறவுகள் ஹஜ் செய்ய சவுதி மன்னர் ஏற்பாடு
நடப்பு 2019 வருடம் மார்ச் 15 ஆம் தேதியன்று நியூஸிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் நகரின் 2 மஸ்ஜிதுகளில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு கூடியிருந்த முஸ்லீம்கள் மீது வலதுசாரிகள் எனப்படும் மதத்தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் ஷஹீதானார்கள் மேலும் சுமார் 49 பேர் பலத்த காயமடைந்தனர் என்பதையும் அறிவோம்.
இத்துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் இரத்த உறவுகள் சுமார் 200 பேரை சவுதி மன்னரின் விருந்தினர்கள் என்ற திட்டத்தின் கீழ் ஹஜ் செய்திட சவுதி மன்னர் ஸல்மான் அவர்களின் சொந்த செலவில் ஹஜ் கடமைகளை நிறைவேற்றிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை உடனே துவங்குமாறு நியூஸிலாந்தில் உள்ள சவுதி தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் ஹஜ்ஜிற்கான வாய்ப்பு பயங்கரவாத வாதத்தால் உயிரிழப்புகளை சந்தித்த உறவுகளுக்கு மன ஆறுதலாக அமையும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் வழமைபோல் 2000 பாலஸ்தீன உயிர் தியாகிகளின் உறவினர்களும், 72 உலக நாடுகளிலிருந்து 1300 பேரும் மன்னரின் சார்பாக இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றவுள்ளனர்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.