அதிரை நியூஸ்: ஜூலை 22
ஒவ்வொரு வருட ஹஜ்ஜின் போதும் சவுதி மன்னரின் தனிப்பட்ட செலவின் கீழ் உலக முழுவதிலிருந்தும் தேர்வு செய்யப்பட்ட மக்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றி செல்வர்.
நடப்பு ஹஜ் கிரிகைகளை நிறைவேற்றுவதற்காக ஏற்கனவே பாலஸ்தீன மக்கள் 2000 பேர், நியூஸிலாந்திலிருந்து 200 பேர், 72 சர்வதேச நாடுகளிலிருந்து 1300 பேர் தேர்வு செய்யபட்டு இவ்வருட ஹஜ்ஜை மன்னரின் விருந்தினர்களாக நிறைவேற்ற உள்ளனர்.
இந்நிலையில், சூடான் தேசிய ராணுவத்தில் பணியாற்றி நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் குடும்பத்தினர் 500 பேர் மற்றும் ஏமன் நாட்டில் சவுதி கூட்டணி படையில் இணைந்து பணியாற்றி உயிர்த்தியாகம் செய்த சூடான் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் 500 பேர் என மொத்தம் 1000 சூடானியர்கள் ஹஜ்ஜை மன்னரின் முழுமையான செலவின் கீழ் நிறைவேற்றிட அனுமதி வழங்கியுள்ளார்.
மன்னரின் விருந்தினர் என்ற திட்டத்தின் கீழ் உலக முழுவதிலிருந்தும் வரும் ஹஜ் பயணிகளுக்கான ஏற்பாடுகளை சவுதி அரசின் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டி அமைச்சகம் ( Ministry for Islamic affairs, call and guidance) செய்து வருகிறது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
ஒவ்வொரு வருட ஹஜ்ஜின் போதும் சவுதி மன்னரின் தனிப்பட்ட செலவின் கீழ் உலக முழுவதிலிருந்தும் தேர்வு செய்யப்பட்ட மக்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றி செல்வர்.
நடப்பு ஹஜ் கிரிகைகளை நிறைவேற்றுவதற்காக ஏற்கனவே பாலஸ்தீன மக்கள் 2000 பேர், நியூஸிலாந்திலிருந்து 200 பேர், 72 சர்வதேச நாடுகளிலிருந்து 1300 பேர் தேர்வு செய்யபட்டு இவ்வருட ஹஜ்ஜை மன்னரின் விருந்தினர்களாக நிறைவேற்ற உள்ளனர்.
இந்நிலையில், சூடான் தேசிய ராணுவத்தில் பணியாற்றி நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் குடும்பத்தினர் 500 பேர் மற்றும் ஏமன் நாட்டில் சவுதி கூட்டணி படையில் இணைந்து பணியாற்றி உயிர்த்தியாகம் செய்த சூடான் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் 500 பேர் என மொத்தம் 1000 சூடானியர்கள் ஹஜ்ஜை மன்னரின் முழுமையான செலவின் கீழ் நிறைவேற்றிட அனுமதி வழங்கியுள்ளார்.
மன்னரின் விருந்தினர் என்ற திட்டத்தின் கீழ் உலக முழுவதிலிருந்தும் வரும் ஹஜ் பயணிகளுக்கான ஏற்பாடுகளை சவுதி அரசின் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டி அமைச்சகம் ( Ministry for Islamic affairs, call and guidance) செய்து வருகிறது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.