.

Pages

Saturday, July 6, 2019

புனித ஹஜ் கடமைகளை நிறைவேற்ற குவியும் பன்னாட்டு யாத்ரீகர்கள்!

அதிரை நியூஸ்: ஜூலை 06
கடந்த வியாழன் அன்று துல்காயிதா முதல் பிறை காணப்பட்டதை அடுத்து 2019 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரை காலம் துவங்கியதை தொடர்ந்து உலகெங்கிலும் இருந்து ஹஜ் யாத்ரீகர்கள் சாரை சாரையாக வந்து புனித மக்கா, மதினா நகரங்களில் குவியத் துவங்கியுள்ளனர்.

தொடர்ந்து 3வது ஆண்டாக மலேசிய ஹஜ் பயணிகள் மக்கா ரூட் இனிஷியேட்டிவ் என்ற திட்டத்தின் கீழ் கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து 463 பேர் கொண்ட முதலாவது அணியினர் மதினா வந்திறங்கினர்.

முன்னதாக வியாழன் அன்று இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மலேசிய ஆகிய நாடுகளின் இருந்து ஹஜ் பிரயாணிகள் ஜித்தா, மதினா ஆகிய விமான நிலையங்களில் வந்திறங்கிய போது சவுதி வான் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள், சவுதி ஹஜ் அமைச்சக உயர் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஹஜ் மிஷன் அதிகாரிகள், தூதரக உயர் அதிகாரிகள் போன்றோர் ஹஜ் பயணிகளை பூங்கொத்துகள், பரிசுப் பைகள் வழங்கி இன்முகத்துடன் வரவேற்பு நல்கினர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு மலேசிய மற்றும் இந்தோனேசியாவில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட மக்கா ரூட் இனிஷியேட்டிவ் திட்டம் துனீஷியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் இந்த வருடம் சுமார் 1.2 மில்லியன் ஹஜ் பயணிகளை அதாவது கடந்த வருடத்தை விட 10% கூடுதலாக யாத்ரீகர்களை கையாளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Makkah Route Initiative என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் நாடுகளிலிருந்து வரும் ஹஜ் பயணிகளுக்கு சவுதி விமான நிலையங்களில் முடிக்க வேண்டிய இமிக்கிரேஷன் சோதனைகள், கஸ்டம்ஸ் கிளியரன்ஸ், சுகாதார சோதனைகள், பேக்கேஜ் என்கோடிங் போன்ற நடைமுறைகள் அனைத்தும் புறப்படும் விமான நிலையத்திலேயே முடிக்கப்படும். பின்பு சவுதி வந்திறங்கிய பின் நீண்ட வரிசையில் காத்திராமல் உள்நாட்டு பயணியை போலும், லக்கேஜ்களுக்காக காத்திராமலும் உடன் வெளியேறிவிடலாம். ஹஜ் பயணிகளின் பேக்கேஜ்களை சம்பந்தட்ட ஹஜ் மிஷன்கள் ஹஜ் யாத்ரீகர்களின் தங்குமிடம் தேடிவந்து வழங்கும்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.