.

Pages

Tuesday, July 2, 2019

வாட்ஸ்அப்பில் அவதூறு செய்தியை பரப்பியர் மீது போலீசில் புகார்!

அதிராம்பட்டினம், ஜூலை 02
வாட்ஸ்அப்பில் அவதூறு செய்தியை பரப்பியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பது;
கடந்த ஜூன் 23 ந் தேதி வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எனது கணவருக்கும், எனக்கும் பிரச்சனை ஏற்பட்டு எனது கணவர் என்னை கொலை செய்துவிட்டார் எனவும், எனது கணவர் தவறான தொழில் செய்து வருகிறார் என்றும், எனது குழந்தைகள் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறார்கள் எனவும், எனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது என்று வாட்ஸ் அப், முகநூலில் பொய்யான செய்தியை அதிராம்பட்டினத்தை சேர்ந்த ஹபீப் ரஹ்மான் என்பவர் பரப்பி வருகிறார். எனது கணவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான செய்தியை பரப்பி எனக்கும், எனது கணவருக்கும் பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்து இருந்தார்.

இதுதொடர்பாக, அதிராம்பட்டினம் போலீசார் நடத்திய விசாரணையில், குடும்ப பிரச்சனை காரணமாக வாட்ஸ்அப்பில் அவதூறு செய்தி பரப்பியது தெரிய வந்தது. அதைதொடர்ந்து போலீசார் ஹபீப் ரஹ்மானை காவல் நிலையத்திற்கு வரவழைத்து இனி இதுபோன்ற அவதூறு செய்தியை பரப்பக்கூடாது என கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.