அதிராம்பட்டினம், ஜூலை 14
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்சி வணிக ஆட்சியல் துறை 2019-2020 ஆம் ஆண்டு சங்க துவக்க விழா கல்லூரி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எம். முகமது முகைதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரி துணை முதல்வர் என்.ஏ முகமது பாருக், கல்லூரி வணிக ஆட்சியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஏ. முகமது நாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக சென்னை காயிதே மில்லத் கல்லூரிப் பேராசிரியர் ஜெ. ஹாஜா கனி கலந்துகொண்டு பேசியது;
'ஆசிரியர்கள் தரும் கண்டிப்பை ஒரு அநீதியாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஆசிரியர்களோடு இணக்கமாக இணைந்து நீங்கள் எவ்வளவு தூரம் பயணிக்கின்றீர்களோ அவ்வளவு தூரம் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய உயர்வை அடைய முடியும். எவ்வளவு ஆழமாக புதைக்கின்ற ஒரு விதை சிறப்பாக வளர்கிறதோ அதேபோல், கல்லூரியில் விழுந்த விதைகள் நீங்கள் நாளை மகத்தான வரலாறு உங்களுக்கு காத்திருக்கிறது. உங்களது கைகளை நம்பி நாளைய சரித்திரம் இருக்கிறது. சமுதாயத்தில் நிழல் தரும் மரங்களாக நீங்கள் வளர்ந்து மக்களை நேர்வழியில் வழிநடத்தக்கூடியவர்களாக திகழ வேண்டும். கல்வியின் பண்பு அடிமைப் பண்பை போக்கும், ஆளுமைப் பண்பை ஆக்கும். புறக்கணிக்க முடியாதவர்களாய், புறந்தள்ள முடியாதவர்களாய் உங்களை வாழ்வில் உருவாக்கும். அத்தகையை ஆளுமைப் பண்புகளை கல்லூரி மாணவர்களாய் நீங்கள் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும். மேலும், இப்பகுதியில் காதிர் முகைதீன் கல்லூரி மட்டும் இல்லையென்றால் இந்த சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி என்பது ஒரு எட்டாக்கனியாக இருந்திருக்கும்' என்றார்.
முன்னதாக, கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரிப் பேராசிரியர் அ.கலீல் ரஹ்மான் விருந்தினர் அறிமுக உரை நிகழ்த்தினார். கல்லூரி மாணவர் டி.எஸ் அசோக் வரவேற்றார். கல்லூரி மாணவர் பி. சேக் முகமது ஆண்டறிக்கை வாசித்தார். நிகழ்ச்சிகளை கல்லூரிப் பேராசிரியை எம். கமருன் நிஹார் தொகுத்து வழங்கினார். முடிவில், கல்லூரி மாணவர் ஜெ. அரிகரன் நன்றி கூறினார். விழாவில், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்சி வணிக ஆட்சியல் துறை 2019-2020 ஆம் ஆண்டு சங்க துவக்க விழா கல்லூரி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எம். முகமது முகைதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரி துணை முதல்வர் என்.ஏ முகமது பாருக், கல்லூரி வணிக ஆட்சியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஏ. முகமது நாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக சென்னை காயிதே மில்லத் கல்லூரிப் பேராசிரியர் ஜெ. ஹாஜா கனி கலந்துகொண்டு பேசியது;
'ஆசிரியர்கள் தரும் கண்டிப்பை ஒரு அநீதியாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஆசிரியர்களோடு இணக்கமாக இணைந்து நீங்கள் எவ்வளவு தூரம் பயணிக்கின்றீர்களோ அவ்வளவு தூரம் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய உயர்வை அடைய முடியும். எவ்வளவு ஆழமாக புதைக்கின்ற ஒரு விதை சிறப்பாக வளர்கிறதோ அதேபோல், கல்லூரியில் விழுந்த விதைகள் நீங்கள் நாளை மகத்தான வரலாறு உங்களுக்கு காத்திருக்கிறது. உங்களது கைகளை நம்பி நாளைய சரித்திரம் இருக்கிறது. சமுதாயத்தில் நிழல் தரும் மரங்களாக நீங்கள் வளர்ந்து மக்களை நேர்வழியில் வழிநடத்தக்கூடியவர்களாக திகழ வேண்டும். கல்வியின் பண்பு அடிமைப் பண்பை போக்கும், ஆளுமைப் பண்பை ஆக்கும். புறக்கணிக்க முடியாதவர்களாய், புறந்தள்ள முடியாதவர்களாய் உங்களை வாழ்வில் உருவாக்கும். அத்தகையை ஆளுமைப் பண்புகளை கல்லூரி மாணவர்களாய் நீங்கள் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும். மேலும், இப்பகுதியில் காதிர் முகைதீன் கல்லூரி மட்டும் இல்லையென்றால் இந்த சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி என்பது ஒரு எட்டாக்கனியாக இருந்திருக்கும்' என்றார்.
முன்னதாக, கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரிப் பேராசிரியர் அ.கலீல் ரஹ்மான் விருந்தினர் அறிமுக உரை நிகழ்த்தினார். கல்லூரி மாணவர் டி.எஸ் அசோக் வரவேற்றார். கல்லூரி மாணவர் பி. சேக் முகமது ஆண்டறிக்கை வாசித்தார். நிகழ்ச்சிகளை கல்லூரிப் பேராசிரியை எம். கமருன் நிஹார் தொகுத்து வழங்கினார். முடிவில், கல்லூரி மாணவர் ஜெ. அரிகரன் நன்றி கூறினார். விழாவில், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.