.

Pages

Sunday, July 28, 2019

TNTJ சார்பில் தலைக்கவச விழிப்புணர்வு பிரசார பேரணி (படங்கள்)

பேராவூரணி, ஜூலை 28
பேராவூரணியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களுக்கான சாலைப் பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் விழிப்புணர்வு பிரசார பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

பேராவூரணி வட்டாட்சியரகத்தில் தொடங்கிய பேரணியை டிஎன்டிஜே தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை ராஜிக் தொடங்கி வைத்தார். மாவட்டப் பொருளாளர் அஷ்ரப் அலி, துணைச் செயலர் ஆவணம் ரியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

பேரணியில், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து ஊர்வலமாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பேரணி சேது சாலை, மெயின் ரோடு, புதிய பேருந்து நிலையம் வழியாக சென்று அண்ணா சிலை அருகில் நிறைவடைந்ததுபட்டுக்கோட்டை டிஎஸ்பி கணேசமூர்த்தி, காவல் துறை ஆய்வாளர் உமா, உதவி ஆய்வாளர் அருள்குமார் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.