.

Pages

Thursday, July 11, 2019

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம், உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (11.07.2019 )நடைபெற்றது.

தஞ்சாவூர் திலகர் திடலில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்தித் தலைவர் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்து கலந்து கொண்டார். விழிப்புணர்வு பேரணி திலகர் திடலில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக தஞ்சாவூர் அரண்மனை வளாகம் சங்கீத மகாலில் நிறைவுபெற்றது. பின்னர் சங்கீத மகாலில் நடைபெற்ற உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு கருத்தரங்கில் உலக மக்கள் தொகை உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் உலக மக்கள் தொகை தின உறுதி மொழியை எடுத்துகொண்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:-
இன்று (11.07.2019) உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய உலக மக்கள் தொகை சுமார் 800 கோடியாகும். இந்திய நாட்டின் மக்கள் தொகை சுமார் 135 கோடியாகும். இந்திய நாட்டின் மக்கள் தொகை உலக நாடுகளில் சுமார் 18 சதவீதமாகும், மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் இடர்பாடுகள், உணவு பற்றாக்குறை, இடப்பற்றாக்குறை ஆகியவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே உலக மக்கள் தொகை தின நிகழ்ச்சியின் நோக்கமாகும்.  குடும்பகட்டுப்பாடு செய்வதன் அவசியம் குறித்து அனைவரும் உணர வேண்டும் மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் விளைவுகளை அறிந்து நாட்டின் வளர்ச்சிக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.

தொடர்ந்து உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், முன்னாள் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் ஆர்.காந்தி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் (பொ) டாக்டர் காந்தி, துணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் குடும்ப நலம்) டாக்டர் மலர்விழி, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) டாக்டர் ரவீந்திரன், அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.