.

Pages

Wednesday, July 17, 2019

அதிராம்பட்டினத்தில் ஜல் சக்தி அபியான் திட்டத்தில் செய்னாங் குளம் சீரமைப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 17
ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் அதிராம்பட்டினம் செய்னாங் குளத்தை சீரமைக்கும் பணி இன்று புதன்கிழமை நடைபெற்றது.

அதிராம்பட்டினம் பேரூராட்சி 2012-2013 ஆம் ஆண்டு நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ், கீழத்தெரு புதுக்குடி பகுதியில் அமைந்துள்ள செய்னாங் குளத்திற்கு தடுப்பு சுவர் அமைத்து, மேம்படுத்தும் பணிகளுக்காக ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு புனரமைக்கப்பட்ட இக்குளம் நாளடைவில் பராமரிப்பின்றி மாசடைந்தது. தற்போது, குளம் முழுவதும் முட்புதர்கள் மண்டி, குளம் இருக்கும் இடம் தெரியாத நிலையில் இருந்தது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், பேரூராட்சிகள் உதவி இயக்குநர்  குற்றாலிங்கம் அறிவுறுத்தலின்படி, அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல் ரமேஷ் தலைமையில், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன் மேற்பார்வையில், ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ், நீர் நிலைகளைப் பராமரிக்கும் வகையில், அதிராம்பட்டினம் செய்னாங் குளத்தை சுற்றி மண்டிக்காணப்பட்ட முட் புதர்கள் அனைத்தும் ஜேசிபி வாகனத்தின் உதவியோடு அகற்றும் பணியில் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபட்டனர். குளத்தை ஒட்டி காணப்படும் மழை நீர் வடிகால் அடைப்புகள் சீரமைக்கப்பட்டன. குளத்தின் அருகே கொட்டப்படும் குப்பைக் கழிவுகள் அகற்றப்பட்டன.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.