.

Pages

Monday, July 29, 2019

அதிராம்பட்டினத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கொடி ஏற்றி வைப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 29
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் கோட்டூரார் என்.கமாலுதீன் நினைவு கொடியேற்றம், கல்வெட்டு திறப்பு விழா அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் என்.காளிதாஸ் தலைமை வகித்தார். விழாவில், அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் கலந்துகொண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை எழுச்சி முழக்கங்களுக்கிடையே ஏற்றி வைத்து கல்வெட்டை திறந்து வைத்துப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் மு.அ பாரதி, ஒன்றியச் செயலாளர்ஏ.எம் மார்க்ஸ், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சி.பக்கரி சாமி, ஏ.ஐ.ஓய், எப் ஒன்றியச் செயலாளர் கே.ஹாஜா முகைதீன், அதிரை பேரூர் துணைச்செயலாளர் எம்.எல்.ஏ ஹசன், ஏ.எச் பசீர் அகமது, எம். முகமது இக்பால் உள்ளிட்ட அக்கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.