.

Pages

Friday, May 9, 2014

+2 தேர்வில் 99 சதவீத வெற்றியை பெற்றுத்தந்த காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியையோடு சந்திப்பு [ காணொளி ]

தமிழகமெங்கும் பிளஸ் 2 தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 195 மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 99 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளி அதிரையளவில் சாதனை நிகழ்த்தியுள்ளது. இவை சென்ற ஆண்டைவீட இந்த ஆண்டு கூடுதலாக 2 சதவிதத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதில் பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவிகளின் விவரங்கள் :

முதல் இடம் : A. நஸரீன்
த/பெ : அஹமது ( சாரா )
பெற்ற மதிப்பெண்கள் : 1082

இரண்டாம் இடம் : A. நசீமா
த/பெ : அப்துல் ஸலாம்
பெற்ற மதிப்பெண்கள் :1071

மூன்றாம் இடம் ( இரண்டு பேர்கள் ) : 
M. பாத்திமா சுஹைலா
K. ஜில்பானா
பெற்ற மதிப்பெண்கள் : 1066

அதிரையளவில் உள்ள பள்ளிகளில் முதல் இடத்தை பெற்று சாதனை நிகழ்த்தியதோடு மட்டுமில்லாமல் 99 சதவீத வெற்றிவாய்ப்பையும் பெற்றுதந்த காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் நிர்வாகம் - தலைமை ஆசிரியை - ஆசிரியைகள் - அலுவலக பணியாளர்கள் - பெற்றோர்கள் - மாணவிகள் ஆகியோருக்கு அதிரை நியூஸ் சார்பில் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொண்டோம்.

சாதனை நிகழ்த்தியது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி சிராஜ்னிஷா அவர்களை சந்தித்து கேட்டறிந்தோம்.


10 comments:

  1. மனம்நிறைந்த எங்கள் மகிழ்வுகள் வாழ்த்தாய்
    தினம்நாங்கள் கூறத் திரள்வோம் - வனப்புகள்
    இவ்வூரில் நீங்காமல் என்றும் திகழ்ந்திடவும்
    செவ்வியக் கல்வித் தெளிவு.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

    ReplyDelete
  3. தேர்வில் தேர்ச்சியுற்ற மாணவிகளுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வாழ்த்துகள்; பாராட்டுகள்; பெற்றோர்களின் தூண்டுதலும் ஒத்துழைப்பும் இருந்தால் தொடர்ந்து மேற்படிப்புப் படிக்கலாம்; இல்லையெனில் வீட்டில் முடங்க வைத்து விடுவர். இந்தப் பிஞ்சுகளின் நெஞ்சுகளில் அரும்பி வரும் கல்வி தாகத்தைத் தீப்ப்பது பெற்றார்களின் கடமையாகும். ஆயினும், பாதுகாப்பானமுறையில் மட்டும் அக்கல்வியைக் கற்கச் செய்தலும் வேண்டும்., ஆகட்டும் நலமாக!

    ReplyDelete
  5. வாழ்த்துகள்; பாராட்டுகள்; பெற்றோர்களின் தூண்டுதலும் ஒத்துழைப்பும் இருந்தால் தொடர்ந்து மேற்படிப்புப் படிக்கலாம்; இல்லையெனில் வீட்டில் முடங்க வைத்து விடுவர். இந்தப் பிஞ்சுகளின் நெஞ்சுகளில் அரும்பி வரும் கல்வி தாகத்தைத் தீப்ப்பது பெற்றார்களின் கடமையாகும். ஆயினும், பாதுகாப்பானமுறையில் மட்டும் அக்கல்வியைக் கற்கச் செய்தலும் வேண்டும்., ஆகட்டும் நலமாக!

    ReplyDelete
  6. தேர்வில் தேர்ச்சியுற்ற மாணவிகளுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்துக்கள், பெற்ற மதிப்பெண்கள் பொறுத்து நல்ல துறை தேர்ந்தெடுங்கள் அதோடுமட்டுமல்லாமல் சிறந்த கல்லூரியும் முக்கியம். பெற்றோர்கள் தங்கள் விருப்பத்தை திணிக்க கூடாது அவர்களுக்கு எதில் ஆர்வமோ அதில் சேர்வது நல்லது - counselling very important .

    ReplyDelete
  8. வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள......

    ReplyDelete
  9. இந்த ஆண்டும் பெண்களுக்கு முதலிடத்தை விட்டுகொடுத்த ஆண்களுக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. மனம்நிறைந்த எங்கள் மகிழ்வுகள் வாழ்த்தாய்
    தினம்நாங்கள் கூறத் திரள்வோம் - வனப்புகள்
    இவ்வூரில் நீங்காமல் என்றும் திகழ்ந்திடவும்
    செவ்வியக் கல்வித் தெளிவு.

    Reply

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.