.

Pages

Friday, May 2, 2014

அதிரை அருகே முன்விரோதம் காரணமாக ஒருவர் கொலை !

அதிரை அருகே உள்ள அணைக்காடு கிராமத்தில் நேற்று மாலை முன்பகை காரணமாக எழுந்த தகராறில் ஒருவர் பலியாயினார்.

அணைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் லாரன்ஸ். நேற்று மாலை இவரது வீட்டிற்குள் ஒரு கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் புகுந்து தாக்கியுள்ளது. இதில் காயங்கள் ஏற்பட்ட டேவிட், பிரதீப், லாரன்ஸ், ஷீலா மற்றும் பிரவீன் ஆகியோர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் யார் எதிர்தரப்பினர் என காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் நேற்றைய தாக்குதலில் லாரன்ஸ் வீட்டிற்குள் புகுந்து தாக்கிய கும்பலில் நாகப்பட்டிணத்தை சேர்ந்த அன்பு என்கிற அன்புராஜ் [ வயது 32 ] லாரன்ஸ் உறவினர்களால் சுற்றி வளைக்கப்பட்டு அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கனவே மூன்று கொலை வழக்குகளும், இரண்டு கொலை முயற்சி வழக்குகளும் இருப்பதாக காவல்துறையினர் கூறினர்.

நன்றி : 'நிருபர்' பட்டுக்கோட்டை ராஜா

2 comments:

  1. Replies
    1. Dear Bro. Aboobakkar, Can

      Thanks for your feedback.. it's removed

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.