.

Pages

Friday, May 23, 2014

அதிரையில் மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வு ! [ படங்கள் இணைப்பு ]

தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு. டாக்டர் என். சுப்பையன் இன்று மாலை 3.30 மணியளவில் அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகப்பணிகள் தொடர்பாக நேரடி ஆய்வை மேற்கொண்டார்.

ஆய்வின் போது அதிரையில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறை தொடர்பான பிரச்சனைகள், பாதியில் நிறுத்தப்பட்ட செயனாங் குளம் பணிகள், திறக்கப்படமால் உள்ள சுகாதார வளாகங்கள் ஆகியன தொடர்பாக கீழத்தெரு ஜமாத் நிர்வாகிகள் வைத்த கோரிக்கைகளை கேட்டறிந்து சம்பந்தபட்டவர்கள் மீது தீவிர நடவடிக்கையை மேற்கொள்வதாக உறுதியளித்தார். ஆய்வின் போது சம்பந்தபட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.






10 comments:

  1. கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்த கீழத்தெரு முஹல்லாவாசிகளுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.மேலும் கீழத்தெரு முஹல்லாக்கு உட்பட்ட பகுதிகளிலும் சீரான குடிநீர் வினியோகம் இல்லாமல் இருப்பதால் இதனையும் தயவுகூர்ந்து பார்க்கும்படி கேட்டுகொள்கிறேன்........அதிரைக்கு வருகைதந்து கோரிக்களை ஏற்ற மாவட்ட கலெகடருக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    மாவட்ட ஆட்சியரின் வருகை அதிரைக்கு நல்லது. ஆனால் வருகை தந்து குறிகிய நேரத்தில் விடை பெறுவது அதிரை மக்களுக்கு திருப்தி அளிக்க வில்லை.

    What I am going to say/ எல்லோருக்கும் புரிந்ததா?

    உங்களுக்கு புரிந்தா சரிதான்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  3. இந்த நேரத்தில் பேரூராட்சி தலைவரை காணவில்லையே என்ன காரணம்?

    ReplyDelete
  4. கலெக்டர் அய்யா, இன்னொரு தடவை வாங்க.

    ReplyDelete
  5. இவரு வந்துட்டு போயிருக்காரு, ஏதாவது நல்லது நடக்க வாய்ப்பு இருக்கா?

    ReplyDelete
  6. நல்ல நடவடிக்கை - ஆய்வு என்றும் சொல்லலாம், கீழத்தெரு சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள்!.

    இதே போல் மக்களிடம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகைளை பிடித்து கொடுக்க மக்கள் முன் வரவேண்டும். இப்படி செய்தால் தான் மக்கள் மீது அதிகாரிகளுக்கு ஒரு பயம் இருக்கும்!

    ReplyDelete
  7. இவரு வந்துட்டு போயிருக்காரு, ஏதாவது நல்லது நடக்க வாய்ப்பு இருக்கா?

    ReplyDelete
  8. மின்மோட்டார் இருக்கும் வரை அனைத்து வீடுகளிகளுக்கும் தண்ணீர் என்பது ஏட்டாகனிதான்.

    மக்களிடம் எப்பொழுது விழுப்புணர்வு வருகிறதோ அப்பொழுதான் அதிரைக்கு விடிவுகாலம்.

    ReplyDelete
    Replies
    1. நம்ம மக்களுக்கு விழிப்புணர்வா? கேட்கவே ஒட்டு மாங்காயை உடைத்து கல்லு உப்பில் தேய்த்து சாப்பிட்டது போல் இருக்குது.

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.