.

Pages

Saturday, September 13, 2014

அதிரையில் கொடுவா, ஷீலா மீன்கள் வரத்து அதிகரிப்பு ! [ படங்கள் இணைப்பு ]

அதிரையை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். அதே போல் அருகில் உள்ள மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கடல் பகுதிகளிலும் மீன்கள் அதிகளவில் பிடிக்கப்படும்.

இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய முதல்–அமைச்சர் விடுத்த கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத இலங்கை அதிபர் ராஜபக்சேயை கண்டித்தும், மீனவர்களை இழிவுபடுத்தி பேசிய சுப்பிரமணியசுவாமிவை கண்டித்தும் சேதுபாவாசத்திரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என்ற முடிவை அடுத்து மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. அதிரையின் பிரதான மார்க்கெட்டாக கருதப்படுகின்ற கடைத்தெரு பகுதியில் அமைந்துள்ள மீன் மார்க்கெட்டிற்கு வழக்கமாக விற்கப்படும் மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது. எனினும் தொலை தூரங்களிலிருந்து குறிப்பாக நாகப்பட்டினம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கொடுவா, ஷீலா மீன்கள் கொண்டு வரப்பட்டு விற்கப்படுகின்றன. அதிக ருசியைத்தரும் இவ்வகை மீன்களை அதிகமான வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கிச்சென்றனர்.


2 comments:

  1. மீன் விலைகு விலைகுறையவில்லை

    ReplyDelete
  2. Vanghubavarhal irukkumvarai vilai kuraiyathu

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.