.

Pages

Tuesday, September 9, 2014

மல்லிபட்டினத்தில் புதியதோர் மனைப்பிரிவு 'டாக்டர் கலாம் சிட்டி' நகர் !

மல்லிபட்டினம் ஈசிஆர் சாலையை ஒட்டி பரந்த நிலப்பரப்பில் புதிதாக அமைக்கப்பட்ட டாக்டர் கலாம் சிட்டி மனைப்பிரிவின் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

மனைபிரிவை பண்ணவயல் ஊராட்சி மன்ற தலைவர் சு. இராஜா தம்பி சேர்வைகாரர் திறந்து வைத்தார். தார் சாலையை சேதுபாவாசத்திரம்  ஒன்றிய பெருந்தலைவர் குழ. சுந்தராஜன் திறந்து வைத்தார். டாக்டர் கலாம் சிட்டி அலுவலகத்தை மல்லிபட்டினம் ஜமாத் தலைவர் முஹம்மது ரபீக் திறந்து வைத்தார். அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் குத்துவிளக்கேற்றி வைத்தார். தண்ணீர் தொட்டியை மனோரா பாலிடெக்னிக் கல்லூரியின் செயலாளர் N.M.S. ஜகபர் அலி திறந்து வைத்தார். அம்மாபட்டினம் ஹாஜி அபுல் ஹசன் அவர்கள் பள்ளிவாசலுக்கு வழங்கிய 60 குழி இடத்திற்குரிய பத்திரத்தை மல்லிபட்டினம் ஜமாத்தாரிடம் ஒப்படைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மல்லிபட்டினம், அதிரை, புதுப்பட்டினம், பட்டுக்கோட்டை, சேதுபாவா சத்திரம், அம்மாபட்டினம், கோட்டைபட்டினம்  உள்ளிட்ட பகுதிகளின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதுகுறித்து மனைப்பிரிவின் நிறுவனர் அபிரகாம் நம்மிடம் கூறுகையில்...
எங்கள் மனைப்பிரிவு ஈசிஆர் சாலையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் 30 அடியில் பிரதான தார் சாலையும், 20 அடியில் குறுக்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மனையில் புதிதாக பள்ளிவாசல் கட்டுவதற்காக 60 குழி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மனை முழுவதும் மின் விளக்கு வசதியும், கழிவு நீர், வடிகால் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுத்தமான குடிநீருடன் 30,000 லிட்டர் கொள்ளளவில் புதிதாக தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.  மேலும் எங்களது மனைபிரிவிற்கு எதிரே ரூபாய் 60 கோடியில் புதிதாக அமைக்க இருக்கும் துறைமுக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

மனைகளை முன் பதிவு செய்து உடன் பத்திரப்பதிவு செய்துகொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்க இருக்கிறோம்' என்றார்.

தொடர்புக்கு : 0091 9842452644

படங்கள் உதவி : உதயம் 






















குறிப்பு:  தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

2 comments:

  1. குத்துவிளக்கு ஏற்றுவது இந்துமத வணக்க வழிபாடு என்பதை யாராவது நம் சேர்மனுக்கு நெருக்கமானவர்கள் அழகிய முறையில் எடுத்துச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  2. நிலத்தை வாங்கி அவனிடமே நிலத்தை விற்பது தான் பேஷனாக போய்விட்டது, இப்போ அரிசி மூட்டை வாங்கினால் ஒரு சேலை இலவசம் என்று கூவி விற்கிறார்கள்,

    இங்கே என்ன வகையான ஸ்பெஷல் கிப்டு என்று தெரிய வில்லை. ஒரு மனை வாங்கினால் ஒரு மனை இலவசம் என்று சொன்னாலும் ஆட்சரியம் இல்லை!!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.