.

Pages

Tuesday, September 9, 2014

'சேனா மூனா' வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழ் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று வழங்கப்பட்டது !

அதிரை பேரூராட்சியின் 8 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக வேட்பாளர் சேனா மூனா என்கிற ஹாஜா முகைதீன் வேல்பு மனு தாக்கல் செய்து இருந்தார். இவரை எதிர்த்து எந்தவொரு வேட்பாளரும் போட்டியிடவில்லை. இதையடுத்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவர் வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழ் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று மாலை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் முனியசாமி, நகர அதிமுக செயலாளர் பிச்சை, துணை செயலாளர் முஹம்மது தமீம், வார்டு கவுன்சிலர்கள் அப்துல் லத்திப், சிவக்குமார், உதயகுமார், அபூ தாஹிர், ஹாஜா பகுருதீன் மற்றும்  ஏனைய அதிமுக பொறுப்பாளர்கள், உள்ளிட்ட கடற்கரைதெரு பிரமுகர்கள், இளைஞர்கள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

முன்னதாக வெற்றிபெற்ற சேனா மூனா என்கிற ஹாஜா முகைதீனுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது.






செய்தி மற்றும் படங்கள் :
நூவன்னா

1 comment:

  1. ஆளும் கட்சினரை எதிர்த்து போட்டி இட்டால் கிடைக்க வேண்டியவர்களுக்கு எதாவது கிடைத்து இருக்கும், இது இல்லாததால் சிலர்க்கு வருத்தம்,

    மேயர் முதல் எல்லா பதவிக்கும் போட்டி இல்லாமல் தேர்வு செய்யப்பட்டது ஆளும் கட்சின் அராஜகம் , தங்க தாரகைக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

    அரசியல்வாதிகளும் அரசாங்கத்தில் சம்பளம் வாங்குபவர்கள், மக்களுக்கு சேவை செய்வதுதான் முதல் வேலை என்பதை உணரவேண்டும்.

    எது எப்படியோ, இவர் மக்களுக்கு பணியாற்ற வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.