.

Pages

Tuesday, September 2, 2014

பட்டுக்கோட்டையில் அதிமுகவினர் நடத்திய பட்டிமன்றம் நிகழ்ச்சி !

பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் அ.தி.மு.க நகர இலக்கிய அணி சார்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றத்திற்கு தஞ்சை மாவட்ட செயலாளரும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். அதிமுக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார்

கூட்டத்தில் பரசுராமன் எம்.பி, மாவட்ட பால்வள தலைவர் காந்தி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் அமுதாராணி, மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் பிரகாசம், மாவட்ட இலக்கிய அணி துணைத்தலைவர் ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டிமன்றத்தை அமைச்சர் வளர்மதி தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள் :
நூர் முஹம்மது ( நூவன்னா )




1 comment:

  1. கூட்டுறவு தேர்தலைத்தான் யாருக்கும் தெரியாமல் யாரையும் அண்டவிடாமல் கமுக்கமாக நடத்தி அந்த பதவி முழுவதையும் அபகரித்து கொண்டது ஆளும் அரசு.

    இதே போலே உள்ளாட்சி தேர்தலும் நடைபெறும். பட்டி மன்றத்தில் அதிகமாக அம்மாவை துதிபாடி எதிர்கட்சினெரை துவசம் செய்து முடிந்தது பட்டிமன்றம்.

    வேறென்ன எதிர்பார்க்க முடியும்!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.