பெரும்பாலான மாணவிகள் அருகில் உள்ள பள்ளிக்கு செல்ல இந்த சந்து பாதையை பயன்படுத்தி வருவார்கள். விபத்து நிகழ்ந்த போது பள்ளி நேரம் என்பதால் மாணவிகளின் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.
தகவலறிந்த அதிரை மின்சாரவாரிய அலுவலர்கள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரிந்த மின்கம்பதை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது. எச்சரிக்கை நடவடிக்கையாக சந்து பாதையின் இருபுறத்திலும் நூலால் கட்டப்பட்டு அடைக்கபட்டுள்ளது. அருகில் நின்ற தென்னை மரம் திடிரென முறிந்து மின்கம்பத்தின் மீது விழுந்ததே விபத்திற்கான காரணம் என கூறப்படுகிறது.
செய்தி மற்றும் படங்கள் :
நூர் முஹம்மது ( நூவன்னா ) மற்றும் சமீர்



பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இது தேவைதானா?
இந்த சந்து எப்போதுமே ஜன நடமாட்டம் உள்ள சந்து, அருகில் வீடுகள் வேறு. துருப்பிடித்து பழுதான மின் கம்பத்தைப் பற்றி மின் வாரிய அலுவலர்களுக்கு தகவல் கொடுக்க யாருக்காவது அக்கறை இருந்ததா?
நல்ல வேளை, எந்த ஒரு இழப்பும் ஏற்படவில்லை.
பொதுமக்களே, உஷாரா இருங்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
Sorry br. Ward member busy. ... as usual
ReplyDeleteஇந்த நேரத்தில் யாருக்கும் எந்த ஒரு ஆபத்தும் நிகழாமல் பாதுகாத்த அல்லாஹ் ஒருவனுக்கே எல்லா புகழும்
ReplyDelete