.

Pages

Saturday, September 13, 2014

பேச இயலாத - காது கேளாதோர் நல சங்கத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ! [ படங்கள் இணைப்பு ]

அதிரையில் வாழும் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர் நல சங்கத்தில் இன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதிரை மேலத்தெருவை சேர்ந்தவர் கமால் பாட்சா இவரது மகன் சாகுல் ஹமீது. இவர் பேச இயலாத - காது கேளாதோர் நல சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார். இவருக்கு கடந்த [ 05-09-2014 ] அன்று எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இதில் பலர் கலந்துகொண்டு மணமகனை வாழ்த்தினர்.

அதன் தொடர்ச்சியாக இன்று மாலை சங்க அலுவலகத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக 'மனித உரிமை ஆர்வலர்' KMA ஜமால் முஹம்மது கலந்துகொண்டு மணமகனை வாழ்த்தினார். இதில் சங்கத்தின் தலைவர் சாகுல் ஹமீது, துணைத்தலைவர் நூருல் அமீன், பொதுச்செயலாளர் சிராஜுதீன், இணைச்செயலாளர் உமர் தம்பி, பொருளாளர் ஜெஹபர் சாதிக் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து வருகை தந்திருந்த சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு மணமகனை வாழ்த்தினர். கலந்துகொண்ட அனைவரையும் மணமகன் சாகுல் ஹமீது அன்புடன் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தார்.





7 comments:

  1. பதிவுக்கு நன்றி.‎

    அவர்களால் பேச முடியாது, மற்றவர்கள் பேசுவதை கேட்க முடியாது, ‎இவை இரண்டையும் தவிர அவர்களிடம் மேலோங்கி இருந்தது ஒரு ‎இறுக்கமான, அசைக்கமுடியாத ஒற்றுமை. ‎

    ஆம், இந்துக்களும், முஸ்லிம்களும், கிறிஸ்த்தவர்களும் இப்படி ஒன்றோடு ‎ஒன்றி கலந்து இருந்தனர், அவைப்பட்டியளிலும் பேர்களும் அப்படியே ‎இருந்தது. மற்றவர்கள் வெட்கப்பட்டு தலைகுனியும் அளவுக்கு அவர்களின் ‎ஒற்றுமை காணப்பட்டது. ‎

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.‎
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.‎
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. ஒற்றுமை என்னும் கயிறைப் பற்றிப் பிடித்தவர்கள் இவர்கள்தானோ ! வாழ்க இவர்கள் !

    வாழக மணமக்கள் பல்லாண்டு !

    ReplyDelete
  3. பேச இயலாத கேட்க இயலாத குறைபாடுகள் இருந்தாலும் உள்ளத்தால் குறைவில்லா மகிழ்ச்சியுடன் இவர்கள் இருப்பதுவே அக்குறைபாட்டை நிறையாக்கி விடுகிறது. ஜாதி மதத்திற்கு அப்பாற்ப்பட்டு இவர்களின் ஒற்றுமை இறைவன் இவர்களுக்கு அளித்துள்ள வரப்பிரதாசமாகும்.

    மணமக்கள் வாழ்வில் எக்குறையும் இல்லாமல் வளமுடன் வாழ வாழ்த்துவோம்.

    ReplyDelete
  4. மணமக்கள் வாழ்வில் எக்குறையும் இல்லாமல் வளமுடன் வாழ வாழ்த்துவோம்.

    ReplyDelete
  5. இந்த தருணத்தில் எல்லோரையும் வாழ்த்துவதில் மிகுந்த சந்தோஷமே.‎

    By:-‎
    JMMA International General Consultancy & Services.‎
    All kind of documents work.‎
    Web Designing.‎
    Flight Ticket Booking.‎
    All India Railway Ticket Booking.‎

    For any other enquiry, please contact us.‎
    jmmaigcs@gmail.com ‎

    ReplyDelete
  6. ஸஹீஹுல் புகாரி 3404. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூஸா(அலை) அவர்கள் மிகவும் வெட்கப்படுபவர்களாகவும் அதிகமாக (தம் உடலை) மறைத்துக் கொள்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் மேனியிலிருந்து சிறிதளவு கூட வெளியே தெரியாது. அவர்கள் (அதிகமாக) வெட்கப்பட்ட காரணத்தால் தான் இப்படி தம் உடலை அவர்கள் மறைத்துக் கொண்டார்கள். அப்போது, பனூ இஸ்ராயீல்களில் அவர்களுக்கு மனவேதனை தர விரும்பியவர்கள் அவர்களுக்குத் துன்பம் தந்தனர்; 'இவருடைய சருமத்தில் ஏதோ குறைபாடு இருப்பதால் தான் இந்த அளவிற்கு இவர் (தன் மேனியை) மறைத்துக் கொள்கிறார். (இவருக்குக்) தொழு நோய் இருக்கவேண்டும்; அல்லது குடலிறக்க நோய் இருக்க வேண்டும்" என்று கூறினார்கள். மூஸா(அலை) அவர்களைப் பற்றி அவர்கள் சொன்ன குறைகளிலிருந்து அவர் தூய்மையானவர் என்று நிரூபித்திட அல்லாஹ் விரும்பினான். எனவே, (இறைவனின் திட்டப்படி) ஒரு நாள் மூஸா (அலை) அவர்கள் மட்டும் (குளிக்குமிடத்திற்குத்) தனியாகச் சென்று, தம் ஆடைகளை (கழற்றிக்) கல்லின் மீது வைத்துவிட்டுப் பிறகு குளித்தார்கள். குளித்து முடித்தவுடன் தம் துணிகளை எடுத்துக் கொள்வதற்காக அவற்றை நோக்கிச் சென்றார்கள். அப்போது அந்தக் கல் அவர்களின் துணியுடன் ஓடலாயிற்று. மூஸா(அலை) அவர்கள், தம் தடியை எடுத்துக் கொண்டு கல்லை விரட்டிப்பிடிக்க முனைந்தார்கள். 'கல்லே என் துணி! கல்லே என் துணி!' என்று குரல் எழுப்பலானார்கள். (அதை விரட்டிச் சென்றபடி) இறுதியில் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாரின் தலைவர்களிருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது பனூ இஸ்ராயீல் சமுதாயத்தினர், மூஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகளிலேயே அழகானவர்களாகவும் தாம் சொன்ன குறைபாடுகளிலிருந்து தூய்மையானவர்களாகவும் இருப்பதை, அவர்களை ஆடையில்லாத கோலத்தில் கண்டதன் மூலம் பார்த்துக் கொண்டார்கள். கல் (ஓடாமல்) நின்றது. உடனே, மூஸா(அலை) அவர்கள், தம் துணியை எடுத்துக் கொண்டு தம் கைத்தடியால் அந்தக் கல்லை அடிக்கலானார்கள். அறிவிப்பாளர் அபூ ஹுரைரா(ரலி) கூறினார்: அல்லாஹ்வின் மீதாணையாக! அந்தக் கல்லின் மீது அவர்கள் (தடியால்) அடித்த காரணத்தால் மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து தழும்புகள் (இன்னும்) உள்ளன. இந்த நிகழ்ச்சியைத் தான், 'இறை நம்பிக்கையாளர்களே! மூஸாவுக்குத் துன்பம் தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் (இட்டுக் கட்டிக்) கூறியவற்றிலிருந்து மூஸா தூய்மையானவர் என்று அல்லாஹ் நிரூபித்துவிட்டான். மேலும், அவர் அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவராக இருந்தார்" என்றும் (திருக்குர்ஆன் 33:69) இறைவசனம் குறிக்கிறது.
    Volume:4,Book:60.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.