நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை லதாஸ்வரி தலைமை வகித்தார். அவர் "தீவிரவாதத்தால் சமுதாயத்திற்கு ஏற்படும் இழப்புகள் குறித்து" மாணவர்களிடையே கருத்துரையாற்றினார். மாணவர்கள் பத்திரிக்கைகளில் வந்த செய்தி ஒட்டப்பட்ட புகைப்படங்களுக்கு முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தி, பாகிஸ்தான் பள்ளி குழந்தைகளுக்காக இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். ஆசிரியைகள் காந்திமதி, ஜெயந்தி, குளோரி, சீதா ஆசிரியர் ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .
செய்தி மற்றும் படம்:
எஸ். ஜகுபர்அலி, பேராவூரணி.
உலகத்தை அதிரவைத்த சம்பவங்களில் பாகிஸ்தான் - பெஷாவர் சம்பவம் கொடூரமானவை, 132 பள்ளி மாணவர்களின் உயிர் பறித்த தாலிபான்கள் சொல்லும் காரணம் பாகிஸ்தான் ராணுவம் தாலிபான்களின் பிள்ளைகள், சொந்தங்களை சுட்டது தான், இது பலிக்கி பலி நடந்த துயரசம்பவம் .
ReplyDeleteஉலகம் அமைதியாக இருந்து விட்டால் மேற்கத்திய நாடுகள் தயாரிக்கும் ஆயூதங்களை மற்ற நாடுகளில் விற்கமுடியாது , தீவிரவாதிகள் உருவாக மேற்கத்திய நாடுகளே காரணம்.
உலகத்தின் கருப்பு தினமாக நேற்றைய தினம் எனலாம்,
மனிதாபிமானமற்ற செயல். மனம் கனக்கிறது.
ReplyDeleteஇந்த தீவிரவாத செயலுக்கு வேதனையும் உலகமாந்தரின் சாபம்தான் உண்டாகாட்டும், இஸ்லாம்மியர்கள் ஒன்று சேர்ந்து தீவிரவாத்தை எதிர்க்கவேண்டும்.
ReplyDeleteபிஸ்மில்லாஹ்ஹிற்றஹ்மான்னிற்றஹீம்
وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا
எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான். 4:93