.

Pages

Thursday, December 18, 2014

பாகிஸ்தான் பள்ளி குழந்தைகளுக்கு அஞ்சலி !

பேராவூரணியை அடுத்த பெரிய தெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் ராணுவப்பள்ளியில் தற்கொலைப்படை தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
         
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை லதாஸ்வரி தலைமை வகித்தார். அவர் "தீவிரவாதத்தால் சமுதாயத்திற்கு ஏற்படும் இழப்புகள் குறித்து" மாணவர்களிடையே கருத்துரையாற்றினார். மாணவர்கள் பத்திரிக்கைகளில் வந்த செய்தி ஒட்டப்பட்ட புகைப்படங்களுக்கு முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தி, பாகிஸ்தான் பள்ளி குழந்தைகளுக்காக இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். ஆசிரியைகள் காந்திமதி, ஜெயந்தி, குளோரி, சீதா ஆசிரியர் ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

செய்தி மற்றும் படம்: 
எஸ். ஜகுபர்அலி, பேராவூரணி.

3 comments:

  1. உலகத்தை அதிரவைத்த சம்பவங்களில் பாகிஸ்தான் - பெஷாவர் சம்பவம் கொடூரமானவை, 132 பள்ளி மாணவர்களின் உயிர் பறித்த தாலிபான்கள் சொல்லும் காரணம் பாகிஸ்தான் ராணுவம் தாலிபான்களின் பிள்ளைகள், சொந்தங்களை சுட்டது தான், இது பலிக்கி பலி நடந்த துயரசம்பவம் .

    உலகம் அமைதியாக இருந்து விட்டால் மேற்கத்திய நாடுகள் தயாரிக்கும் ஆயூதங்களை மற்ற நாடுகளில் விற்கமுடியாது , தீவிரவாதிகள் உருவாக மேற்கத்திய நாடுகளே காரணம்.

    உலகத்தின் கருப்பு தினமாக நேற்றைய தினம் எனலாம்,

    ReplyDelete
  2. மனிதாபிமானமற்ற செயல். மனம் கனக்கிறது.

    ReplyDelete
  3. இந்த தீவிரவாத செயலுக்கு வேதனையும் உலகமாந்தரின் சாபம்தான் உண்டாகாட்டும், இஸ்லாம்மியர்கள் ஒன்று சேர்ந்து தீவிரவாத்தை எதிர்க்கவேண்டும்.

    பிஸ்மில்லாஹ்ஹிற்றஹ்மான்னிற்றஹீம்

    وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا
    எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான். 4:93

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.