.

Pages

Sunday, March 12, 2017

காதிர் முகைதீன் கல்லூரியில் 62-வது பட்டமளிப்பு விழா ( படங்கள் )

அதிராம்பட்டினம், மார்ச்-12
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் 62 வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி இன்று [ 12-03-2017 ] ஞாயிற்றுக்கிழமை ஹாஜி.ஏ.எம்.சம்சுதீன் நினைவு கலையரங்கில் நடைபெற்றது.

விழாவில் கல்லூரி நிர்வாகி, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம். தணிகாசலம் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.எம். உதுமான் முகையதீன் பட்டமளிப்பு விழா உறுதிமொழியினை வாசித்தார்.

தஞ்சாவூர் மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர், முனைவர் எம். பியாட்ரிஸ் மார்க்ரெட் ,750 இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில்; 'மாணவர்கள் பெற்றோருக்கும், ஆசிரியருக்கும், தாய் நாட்டுக்கும் பெருமை சேர்த்து சிறந்து விளங்க வேண்டும். வாழ்க்கையில் முன்னேற மாணவர்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் அவசியம். விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்' என்றார்.

முன்னதாக கணிதவியல் துறைத் தலைவர் முனைவர் எஸ். சந்திரசேகரன் வரவேற்று பேசினார். விழா முடிவில் பேராசிரியர் டி. லெனின் நன்றி கூறினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் மேஜர் முனைவர் எஸ்.பி கணபதி தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக, ஆய்வகப்பணியாளர்கள் மாணவ, மாணவியர்கள் பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
( படத்தில் ) திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தஞ்சாவூர் மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் முனைவர்.எம்.பியாட்ரிஸ் மார்க்ரெட் அவர்கள் பட்டங்களை  வழங்குகிறார். அருகில் கல்லூரி நிர்வாகி சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.தணிகாசலம், கல்லூரி முதல்வர் முனைவர்.ஏ.எம். உதுமான் முகையதீன் மற்றும் பேராசிரியர்கள்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.