.

Pages

Wednesday, March 15, 2017

ஜாமீன் வேணுமா? சீமை கருவேல மரங்களை வெட்டுங்க! அரியலூர் நீதிபதியின் புது உத்தரவு

அரியலூர், மார்ச் 15: ஜாமீனில் வெளியே செல்பவர்கள் 20 நாட்களுக்குள் 100 சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று அரியலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜாமீன் கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளவர்களுக்கு அரியலூர் மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்க புதிய வகையான நிபந்தனையை விதித்துள்ளது.

அதன்படி, ஜாமீனில் வெளிவரும் குற்றம் சாட்டப்பட்டவர் 20 நாட்களுக்குள் 100 சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்பதே!

ஜாமீனில் செல்பவர்கள் சீமை கருவேல மரங்களை அகற்றியதற்காக கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட நீதிமன்றம் புதிய நிபந்தனையை விதித்துள்ளது.

இந்த புதுவகையான நிபந்தனையை அரியலூர் மாவட்ட நீதிபதி ஏ.கே.ஏ.ரஹ்மான் பிறப்பித்தார். அரியலூர் நீதிமன்றத்தின் இந்த புதிய உத்தரவை பல தரப்பினரும் வரவேற்றுள்ளனர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.