.

Pages

Thursday, July 13, 2017

தஞ்சையில் புத்தக திருவிழா !

தஞ்சாவூரில் வருகின்ற 15.07.2017 அன்று அரண்மனை வளாகத்தில்
புத்தக திருவிழா தொடக்கம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் நடைபெறவுள்ள புத்தக திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று வியாழக்கிழமை (13.07.2017) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரண்மனை வளாகத்தில் வருகின்ற  15.07.2017 முதல் 24.07.2017 வரை புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது.  புத்தகக் கண்காட்சியில் 103 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 74 முன்னணி புத்தக பதிப்பு நிறுவனங்கள் இதில் கலந்து கொள்கின்றனர். மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள பொது மக்களும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி புதிய நூல்கள் பற்றி தெரிந்து வாங்கி செல்லலாம்.  மேலும், மாணவ மாணவியர்கள் இன்புறுவதற்காக தினசரி கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும், ஒரு புதிய நூலகம் அமைய வேண்டும் அதற்கு இந்த புத்தக கண்காட்சியினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பயன் பெறும் வகையில் 15.07.2017 முதல் 24.07.2017 முடிய தஞ்சாவூர் புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது.  இப்புத்தக திருவிழா காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறும். நுழைவுக் கட்டணம் கிடையாது.

இப்புத்தக கண்காட்சியில் பல்வேறு முதன்மையான பதிப்பகத்தரால் வெளியிடப்பட்டுள்ள அறிவியல், தொழில் நுட்பம், வரலாறு, பொது அறிவு, போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்த புத்தகங்கள் இடம் பெற உள்ளன. ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தலைப்புகளில்  புத்தகங்கள் இடம் பெறவுள்ளன.

எனவே, பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் இந்த புத்தகத் திருவிழாவில் பங்கேற்று தங்களின் அறிவுத் திறனை வளர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், மாநகராட்சி ஆணையர் வரதராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) ரவிமனோகர், சுற்றுலாத்துறை அலுவலர் ராஜசேகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி, வட்டாட்சியர் தங்கபிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.