.

Pages

Wednesday, July 12, 2017

சவூதியில் வீட்டுப் பணியாளர் சட்டங்களில் வரவேற்கத்தக்க திருத்தங்கள் அறிவிப்பு !

அதிரை நியூஸ்: ஜூலை 12
சவுதியில் வீட்டுப் பணியாளர்களாக பணியாற்றுபவர்களின் நலன்சார் 13 வகை திருத்தங்களை சவுதி தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து 3 மாதங்களுக்கு சம்பளம் அல்லது இடைப்பட்ட மாதங்களில் முறையாக சம்பளம் தராமல் இழுத்தடிக்கும் முதலாளிகளிடமிருந்து புதிய முதலாளியின் கீழ் மாறிக் கொள்வதற்கான அனுமதி.

விமான நிலையத்தில் வந்திறங்கும் வீட்டுப் பணியாளர்களை அழைத்து செல்லாத முதலாளிகள், சவுதிக்கு வருகை தந்த பின் பாதுகாப்பு மையங்களில் (shelter house) தங்க வைக்கப்பட்டு 15 தினங்களாகியும் தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்லாத முதலாளிகள், ரெஸிடென்ட் பெர்மிட் அடிக்காதவர்கள் மற்றும் விசா காலாவதியாகி 30 நாட்கள் ஆன பின்பும் புதுப்பிக்கத் தவறிய முதலாளிகள், வீட்டுப் பணியாளர்களை ஏமாற்றி பிறரிடம் வீட்டு வேலைக்கு அனுப்பும் முதலாளிகள், உறவினர் வீடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் முதலாளிகள், உயிருக்கும் உடலுக்கும் கேடுதரும் அபயகரமான பணிகளில் ஈடுபடுத்தும் முதலாளிகள் போன்றோரிடமிருந்தும் விடுதலை பத்திரம் பெற்று பிறரிடத்தில் வேலைக்கு சேர்ந்து கொள்ளலாம்.

அதேபோல் உடல்ரீதியாக துன்புறுத்தப்படும் தொழிலாளர்கள் அவர்களின் முதலாளியின் மீது குற்றம் சுமத்திய நிலையில், தொழிலாளர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தும் முதலாளிகள், தொழிலாளர்களால் புகாருக்கு உள்ளான முதலாளிகள் தொடர்ந்து 2 முறை விசாரணைக்கு வராவிட்டால், பணியாளர் தாயகத்திற்கு பயணம் செய்ய இயலாத வகையில் வெளிநாட்டிற்கு போய்விட்ட முதலாளிகள், சிறைபட்ட முதலாளிகள், இறந்து விட்ட முதலாளிகள் அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்தால் தொடர்ந்து 3 மாதங்கள் சம்பளம் கொடுக்க இயலாதவர்களிடமிருந்தும் வேலையை விட்டு விலகி புதிய முதலாளியிடம் சேர்ந்து கொள்ளலாம்.

அதேவேளை புதிதாக வேலைக்கு எடுக்கும் புதிய முதலாளிகள் குறிப்பிட்ட பணியாளரின் ரெசிடென்ட் விசா மாற்றுக் கட்டணம் மற்றும் பாதுகாப்பு இல்லங்களில் தங்கியிருந்த ஒவ்வொரு நாளுக்கும் 150 ரியால்கள் என கணக்கிட்டு செலுத்தி வேலைக்கு எடுத்துக் கொள்ளலாம் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.