அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலர் அதிராம்பட்டினம் எஸ். அப்துல் அஜீஸ் மகன் பொறியாளர் ஏ. அப்துல் ரெஜாக் மணமகனுக்கு 'நிக்காஹ்' எனும் திருமண விழா ஞாயிற்றுக்கிழமை காலை அதிராம்பட்டினம் செக்கடிப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, ஹாஜி மீ.மு எஸ்.ஏ முஹம்மது இப்ராஹீம் தலைமை வகித்தார். திருமணத்தை சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் அதிரை அல் மதரஸத்துர் ரஹ்மானிய அரபிக்கல்லூரி பேராசிரியர் ஏ.ஜே முஹம்மது நெய்னா ஆலிம் நடத்தி வைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாக, சென்னை அடையார் பள்ளி தலைமை இமாம் மவ்லவி ஸதீதுத்தீன் பாகவி, இஸ்லாமிய மார்க்க பிரச்சாரகர் மவ்லவி ஹைதர் அலி ஆகியோர் கலந்துகொண்டு திருமண விழா பேரூரை நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில், ராஜ்யசபா உறுப்பினரும், அதிமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலர் ஆர். வைத்திலிங்கம் எம்.பி, தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் பரசுராமன் எம்.பி, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜ் எம்.எல்.ஏ, பட்டுக்கோட்டை ஒன்றியச்செயலர் சுப்ரமணியன், அம்மா பேரவை முன்னாள் செயலாளர் சு.பாஸ்கர் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் மற்றும் ஜமாத்தார்கள், ஊர் பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமகனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும் அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலர் அதிராம்பட்டினம் எஸ். அப்துல் அஜீஸ் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தார்.
بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكُمَا وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ
ReplyDelete“Allah bless you, and may He send blessings upon you, and may He unite you both in good.”
God bless adirai
ReplyDeleteGod bless adirai
ReplyDelete