.

Pages

Monday, July 31, 2017

அமீரகத்தில் மீண்டும் அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு !

அதிரை அனைத்து முஹல்லா பிரதிநிதிகளின் சிறப்பு ஆலோசணைக் கூட்டம் துபை தமுமுக மர்கஸில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், தாயகத்தில் உள்ள அதிராம்பட்டினம் முஹல்லா சங்கங்கள், அமீரகத்தில் செயல்படும் அதிராம்பட்டினம் முஹல்லா அமைப்புகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து கூட்டமைப்பாக செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஏற்கனவே கூட்டமைப்பாக செயல்பட்டு வந்த அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகம் கடந்த 2013 ஆம் ஆண்டிற்குப்பின் செயல்படாமல் இருப்பதால் அதற்கு பதிலாக புதிய அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதா?அல்லது அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு பெயரில் இயங்குவதா ? என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு இறுதியாக மீண்டும் அதே பெயரிலேயே புதிய உத்வேகத்துடன் புதிய நிர்வாக அமைப்பை ஏற்படுத்தி தொடர்ந்து செயல்படுவது என ஏகமானதாக தீர்மானிக்கப்பட்டது.

மேற்படி தீர்மானத்தின் அடிப்படையில் முஹல்லாவுக்கு தலா 3 பேர் வீதம் அமீரகத்தில் செயல்படும் அதிரை அனைத்து முஹல்லா சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு எதிர்வரும் 18.08.2017 அன்று மீண்டும் கூடி ஆலோசித்து முதற்கட்ட செயல்வடிவம் தருவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

முதற்கட்ட ஆலோசனை அமர்வில் அதிராம்பட்டினம் அனைத்து முஹல்லா சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கலந்துகொண்டோர் விவரங்கள்:
1. முஹமது அஸ்லம் - நெசவுத் தெரு
2. செய்யது மீரான் - நெசவுத் தெரு
3. காதர் அலி - தரகர் தெரு
4. பிஸ்மில்லாஹ் கான் - தரகர் தெரு
5. சேக் அலாவுதீன் - தரகர் தெரு
6. அதிரை மைதீன் - தரகர் தெரு
7. பக்கீர் முஹமது - கீழத்தெரு
8. ஜியாவுதீன் - கீழத்தெரு
9. முஹமது அஜீஸ் - கீழத்தெரு
10. நெய்னா முஹமது - கீழத்தெரு
11. முஹமது யூசுப் - நடுத்தெரு
12. அமீன் - நடுத்தெரு
13. அப்துல் காதர் - நடுத்தெரு
14. ஹாஜா முகைதீன் - மேலத்தெரு
15. முஹமது மாலிக் - மேலத்தெரு
16. சேக் நஸ்ருதீன் – மேலத்தெரு
17. சாகுல் ஹமீது  -- கடற்கரைதெரு

மேற்படி ஆலோசணைக் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாத முஹல்லா சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அமீரகத்தில் செயல்படும் அதிராம்பட்டினம் முஹல்லா பிரதிநிதிகள் அவசியம் அடுத்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக கீழ்காணும் தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டு எதிர்வரும் 15.08.2017 ஆம் தேதிக்குள் தங்களுடைய வருகையை உறுதி செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

முஹமது மாலிக் - 055 2481483, 050 7914780

அழைப்பின் மகிழ்வில்...
புதிய அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் பிரதிநிதிகள்
 

5 comments:

  1. ஏன் முன்னாள் முஹல்லா மூட பட்டது என்று உங்களுக்கு தெரியும 1 பெரிய ஜும்மா பள்ளியை மேலத்தெரு ஜும்மா பள்ளி என்று சொல்லி கீழத்தெரு முஹல்லா வாசி இடம் மண கசப்பை ஏர் படுத்தியது , 2 சேர்மேன் அஸ்லாம் கொண்டுவந்த பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்திற்கு பெரிய ஜும்மா பள்ளியில் அறிக்கை செய்ய மறுத்தது எல்லா ஜும்மா பள்ளியிலும் அனுமதித்தார்கள் பெரிய ஜும்மா பள்ளியை தவிர .3 ஒரு முஹல்லா குறுப்பு இருக்கும் போது அதே முஹல்லாவுக்கு மற்றொரு குரூப்பை செயலாற்று அனுமதி இண்ட்ரி கூட்டத்துக்கு வரவைத்தது , 4சம்சுல் இஸ்லாம் சங்க துணை தலைவரை சங்கத்தின் உள்ளே வைத்து தர குறைவாக பேசியது . 5 செக்கடி குளத்திற்கு தண்ணீர் சிம்பி வாய்க்கால் வாலியக கொண்டு வரும் போது அன்ட்றிய டீயா தலைவன் ஜமாலுதீன் தாஜுல் இஸ்லாமுடைய இளைஞ்ர்களை இரவில் சிம்பி வாய்க்காளை வளம் வந்த போது மர்ஹும் சம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் மூலமாக தாஜுல் இஸ்லாம் சங்க தலைவருக்கு தெரியபடுத்தபட்டது அதையும் மீறி உன்னால் முடித்ததை பார்துக்கொள் என்று அங்கயே மண்ணை அல்லி மூட்டை போட்டு தணீரை அடைத்து தெரு எங்கும் தன்னீர் இரண்ட்நாள் ஓடியது இவ்வளையும் பொறுத்து கொள்ள முஹல்லா வாசிகள் முட்டாள்களா.

    ReplyDelete
  2. ஏன் முன்னாள் முஹல்லா மூட பட்டது என்று உங்களுக்கு தெரியும 1 பெரிய ஜும்மா பள்ளியை மேலத்தெரு ஜும்மா பள்ளி என்று சொல்லி கீழத்தெரு முஹல்லா வாசி இடம் மண கசப்பை ஏர் படுத்தியது , 2 சேர்மேன் அஸ்லாம் கொண்டுவந்த பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்திற்கு பெரிய ஜும்மா பள்ளியில் அறிக்கை செய்ய மறுத்தது எல்லா ஜும்மா பள்ளியிலும் அனுமதித்தார்கள் பெரிய ஜும்மா பள்ளியை தவிர .3 ஒரு முஹல்லா குறுப்பு இருக்கும் போது அதே முஹல்லாவுக்கு மற்றொரு குரூப்பை செயலாற்று அனுமதி இண்ட்ரி கூட்டத்துக்கு வரவைத்தது , 4சம்சுல் இஸ்லாம் சங்க துணை தலைவரை சங்கத்தின் உள்ளே வைத்து தர குறைவாக பேசியது . 5 செக்கடி குளத்திற்கு தண்ணீர் சிம்பி வாய்க்கால் வாலியக கொண்டு வரும் போது அன்ட்றிய டீயா தலைவன் ஜமாலுதீன் தாஜுல் இஸ்லாமுடைய இளைஞ்ர்களை இரவில் சிம்பி வாய்க்காளை வளம் வந்த போது மர்ஹும் சம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் மூலமாக தாஜுல் இஸ்லாம் சங்க தலைவருக்கு தெரியபடுத்தபட்டது அதையும் மீறி உன்னால் முடித்ததை பார்துக்கொள் என்று அங்கயே மண்ணை அல்லி மூட்டை போட்டு தணீரை அடைத்து தெரு எங்கும் தன்னீர் இரண்ட்நாள் ஓடியது இவ்வளையும் பொறுத்து கொள்ள முஹல்லா வாசிகள் முட்டாள்களா.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் குறிப்பிட்டுள்ள குறைகள் -தவறுகள் உண்மையென்றால் அதனை சரிசெய்ய வேண்டும். பதவிக்கு தேர்ந்தெடுப்பவர்களைப் பார்த்தால் அவரு ஒரு முக்கிய புள்ளி (.)நடுநிலையாளர், சமூக சிந்தனைளையார் இதெல்லாம் ?. தெருவுக்கு 2 , 3 குரூப் இருக்கும் அத்தனைக்கும் நடுநிலையாளரை தேர்ந்தெடுக்கணும் என்றால் கஷ்டம்., எல்லாவற்றையும் விட ஒரு நபர் ஏதாவது அமைப்பு அல்லது அரசியல் சார்ந்தவராகத்தான் இருப்பார்., ஊரின் நலன்கருதி தொண்டுசெய்பவர்கள் சிலர் தான் அவர்களோ நமக்கேன் " வம்பு" அப்படின்னு சொல்லிட்டு போறாங்க. பிரச்னை வந்தால் அமைப்பு தேவை என்கிறோம் இல்லையென்றால் எல்லாம் "தலைவர்கள்". ஒவ்வொரு தெருவுக்கும் ஜமாத்தும் ஒரு அமைப்பும் இருக்கும்போது ஐக்கிய ஜமாத் தேவையா ? இதற்க்கு விடை காண அதிரையரிடம் கருத்து /வாக்கு கேளுங்க. கூட்டத்திற்கு வந்தவர்கள் குறிப்பிட்ட தெருவாசிகளே! மற்ற தெருவாசிகள்?

      Delete
    2. அஸ்ஸலாமு அலைகும்
      Upgrade manage - க்கு என் பதில் இல்லை. திருடன் தடயத்தைவிட்டுவிட்டான். அனைத்து முஹல்லா கூட்டமைப்பு களைந்ததற்கு ஷம்சுல் இஸ்லாம் சங்க அதிரை நிர்வாகி ஒருவரும், அ.அ.மு.கூ அமீர பொறுப்பாளர்களும் தான். தேவையில்லாமல் என் பெயரை, இனிசியலும், முகவரியும் இல்லாத ஒருவர்.ஏற்கனவே இருந்த அ.அ.மு.கூ-பை குளைத்தவர் எழுதியது முற்றிலும் பொய்யான தகவல். மீண்டும் உள்ளாட்சி தேர்தல் வரவுள்ள நிலையில் மறுபடியும் அந்த சதிகாரர்கள் நுழைய எத்தனிக்க்ர்னார்கலோ என நான் சந்தேகிக்கிறேன். எப்போதுமே இவர்கள் ஊர் ஒன்றுபடுவதை விரும்பமாட்டார்கள். உங்களுடைய முயற்சியில் மிக கவனமுடன் இருக்க வேண்டுகிறேன். ஏற்கனவே கடந்த முறை அனைத்து முஹல்லா சங்க நிர்வகிகளையும் சந்தித்து, அ.அ.மு.கூ. அவசியம் குறித்து கூறும்போது, அப்போதைய கடல் கரைத் தெரு சங்க தலைவர் கூறியதை இங்கே தங்கள் அனைவருடைய கவனத்திற்கு கொண்டு வருகிறேன். அது எதாவது அவர்களுக்கு தேவை இருந்தால் ஊர் ஒற்றுமை என்று வருவீர்கள் உங்களுடைய தேவை நிறைவேறிவிட்டால் சொல்லாமல் களைத்துவிடுவீர்கள் என்று அவர் கூறியது நடந்தது. பொய்யான காரணங்களைக் விட்டுவிட்டு உண்மையை பதியுங்கள். நல்ல மகன் ஒழுங்கானவன் தன் பெயரை போட்டு தன் கருத்தை பதிவான். இப்படி பெட்டைபோல் பதியமாட்டான். வஸ்ஸலாம்.
      தேவை இருப்பின் 9488111121

      Delete
  3. அப்புகிரேடு...பேருல எழுதியுள்ள அனானி கருத்தை அனுமதிக்கக் கூடாது நிஜாம். தேவை எனில் அந்தத் தம்பி தம் பெயரில் எழுதிக் கொள்ளட்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.