.

Pages

Tuesday, August 1, 2017

ஹஜ் செய்திகள்: நாட்டிற்காக உயிர்நீத்த 1000 எகிப்திய ராணுவத்தினர் வாரிசுகள் ஹஜ் செய்ய மன்னர் சார்பாக ஏற்பாடு

அதிரை நியூஸ்: ஆக. 01
ஓவ்வொரு ஆண்டும் சவுதி மன்னரின் சார்பாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொகையினருக்கு ஹஜ் கடமைகளை சவுதி அரசின் முழுச்செலவில் நிறைவேற்றுவதற்குரிய வாய்ப்புகள் வழங்கப்படும். கடந்த ஆண்டு சுமார் 400 நிர்க்கதியான பாலாஸ்தீனிய குடும்பங்கள ஹஜ் செய்திட வாய்ப்புக்கள் வழங்கப்பட்டது மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

இந்த ஆண்டும் சவுதி மன்னர் சல்மான் அவர்களின் சார்பாக ஹஜ் செய்திட 1000 எகிப்தியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தங்களின் தாய் நாட்டிற்காக உயிர்துறந்த ராணுவம் மற்றும் போலீஸாரின் குடும்பத்தினர் ஆவர். முஸ்லீம்கள் என்ற ரீதியில் இந்த வாய்ப்பு வரவேற்கத் தகுந்ததே என்றாலும் சொல்லப்பட்டுள்ள காரணம் சற்று நெருடலாகவுள்ளது.

அதேவேளை எகிப்திய ராணுவம் மற்றும் போலீஸ் படையினர் பெரும்பாலோர் இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனைப்போக்கும், மேற்கத்திய கலாச்சார மோகமும் கொண்ட ஆளும் எகிப்திய ராணுவ ஆட்சியாளர்களின் உத்தரவின் பேரில் முஸ்லீம்களை கொன்று குவிக்கக்கூடியவர்கள் என்ற கருத்தும் பலமாக நிலவுகிறது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.