.

Pages

Saturday, August 26, 2017

ஹஜ் செய்திகள்: கிங் சல்மான் அறக்கட்டளை ஹஜ் திட்டத்தின் கீழ் 29,000 பயனாளிகள் !

அதிரை நியூஸ்: ஆக. 26
ஹிஜ்ரி 1417 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் கிங் சல்மான் அறக்கட்டளை ஹஜ் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு வரை சுமார் 27,000 பயனாளிகள் ஹஜ் செய்துள்ளதாக அதனை நிர்வகித்து வரும் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டி மையத்திற்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வருகை தந்துள்ள ஹஜ் யாத்ரீகர்கள் மக்கா, மதினாவில் செய்யப்பட்டுள்ள வசதிகள், பாதுகாப்பு படையினர் தங்களுக்கு வழங்கும் மரியாதைகள் குறித்தும் சிலாகித்தும், சவுதி மன்னரை வாழ்த்தியும் வருகின்றனர்.

புனிதத் தலங்களுக்கான மெட்ரோ டிக்கெட்டுகளை ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து கொள்ளும் வசதி வியாழன் முதல் துவங்கியது. டிக்கெட்டுகள் 5 வண்ணங்களில் வழங்கப்படுகின்றன.

1. கத்தரி நிற ஊதா (Purple) டிக்கெட் : மினா 1, முஜ்தலிபா 1, அரஃபா 1 ஸ்டேசன்களுக்கு
2. ஆரஞ்சு நிற (Orange) டிக்கெட் : மினா 2, முஜ்தலிபா 2, அரஃபா 2 ஸ்டேசன்களுக்கு
3. நீல நிற (Blue) டிக்கெட் : மினா 3, முஜ்தலிபா 3, அரஃபா 3 ஸ்டேசன்களுக்கு
4. காக்கி நிற (Brown) டிக்கெட் : தஷ்ரீக் உடைய நாட்களில் அனைத்து ஸ்டேஷன்களுக்கு செல்வதற்கும்
5. பச்சை நிற (Green) டிக்கெட் : அனைத்து ஸ்டேஷன்களுக்கும் எந்த நேரத்திலும் செல்ல பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த வருட ஹஜ்ஜூடைய காலத்தில் சுமார் 350,000 பயணிகள் மெட்ரோ பயணம் மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுவதால் மெட்ரோ பாதுகாப்பு குறித்த அனைத்து சோதனைகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.