.

Pages

Tuesday, August 29, 2017

அதிராம்பட்டினத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 29
அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 சார்பில் அதிராம்பட்டினம் பேருராட்சி முழுதும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

அதிராம்பட்டினம் பேருராட்சி பகுதி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் அதிராம்பட்டிணம் பேருந்து நிலையத்தில் துவங்கி, இப்பகுதியில் உள்ள கல்வி நிலையங்கள, மருத்துவமனைகள் மற்றும் அனைத்து தெருக்களிலும் நடைபெற்றது. 10,000 துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

பிரச்சாரத்திற்கு  சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் தலைவர் வ.விவேகானந்தம் தலைமை வகித்தார். துணை செயலாளர் கே. இத்ரீஸ்அஹமது. முன்னிலை வகித்தார். மன்ற செயலாளர் எம்.எப்.முஹம்மதுசலீம் அனைவரையும் வரவேற்றார். ஓருங்கிணைப்பாளர் பேராசிரியர் கா. செய்யது அஹமதுகபீர் கொடியசைத்து பிரச்சாரத்தை துவங்கி வைத்தார்.

பிரச்சாரத்தில் சுற்றுச்சூழல் மன்ற உறுப்பினர்கள் எஸ. அகமது அனஸ் என் ஷேக்தம்பி ஏ.இம்ரான், தூய்மைத்தூதுவர்கள் எஸ். கமருல் எஸ். ஜகபர்சாதிக் சம்சுல்ஹக் காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் எஸ் நாகராசன் தலைமையில் 10 தேசிய பசுமைப்படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இரா.அண்ணாதுரை சுகாதார ஆய்வாளர் வி.ரவிச்சந்திரன், ரோட்டரி சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜே.ஹாஜா பகுருதீன்,  அதிரை ரோட்டரி சங்க தலைவர் ஆர் ஆறுமுகம் செயலாளர் டி.நவாஸ்கான் ஆகியோர் பிராச்சாரத்தை வரவேற்று பேசினார்கள்.

பிரச்சாரத்தின் போது பேருராட்சி பகுதியில் சேர்ந்துள்ள குப்பைகள், குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்புகள் பற்றி பொது சுகாதாரத்துறை மற்றும் பேருராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பேரணி முடிவில் செயற்குழு உறுப்பினர் எம்.பி. அப்துல் ஹலிம் நன்றி கூறினார்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.