அதிராம்பட்டினம், ஆக. 21
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி தேசிய மாணவர் படை ( என்சிசி ) சார்பில் மரக்கன்றுகள் நடும் முகாம் காதிர் முகைதீன் கல்லூரி வளாகத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.
கல்லூரிச் செயலர் எஸ்.ஜே அபுல் ஹசன் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஏ முகம்மது முகைதீன் முன்னிலை வகித்தார். முகாமில் வேங்கை, புங்கை, தென்னை உள்ளிட்ட மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டன. மரக்கன்றுகளை பாதுகாக்க கூண்டுகள் வைக்கப்பட்டன.
முகாம் ஏற்பாட்டினை காதிர் முகைதீன் கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் மேஜர் பி. கணபதி செய்தார். இம்முகாமில் பேராசிரியர்கள் நாசர், சேக் அப்துல் காதர், அலுவலக உதவியாளர் ஜெயக்குமார் மற்றும் கல்லூரி தேசிய மாணவர் படை வீரர்கள் 65 பேர் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி தேசிய மாணவர் படை ( என்சிசி ) சார்பில் மரக்கன்றுகள் நடும் முகாம் காதிர் முகைதீன் கல்லூரி வளாகத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.
கல்லூரிச் செயலர் எஸ்.ஜே அபுல் ஹசன் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஏ முகம்மது முகைதீன் முன்னிலை வகித்தார். முகாமில் வேங்கை, புங்கை, தென்னை உள்ளிட்ட மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டன. மரக்கன்றுகளை பாதுகாக்க கூண்டுகள் வைக்கப்பட்டன.
முகாம் ஏற்பாட்டினை காதிர் முகைதீன் கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் மேஜர் பி. கணபதி செய்தார். இம்முகாமில் பேராசிரியர்கள் நாசர், சேக் அப்துல் காதர், அலுவலக உதவியாளர் ஜெயக்குமார் மற்றும் கல்லூரி தேசிய மாணவர் படை வீரர்கள் 65 பேர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.