அதிராம்பட்டினம், ஆக. 31
ஹஜ் பெருநாள் பண்டிகையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் செம்மறி ஆடுகள் விற்பனை களைகட்டத் தொடங்கி உள்ளது.
இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான ஹஜ் பெருநாள் பண்டிகை செப்டம்பர் 2-ம் தேதி தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இஸ்லாமியர்கள் ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் குர்பானி இறைச்சியை தானமாக வழங்கி மகிழ்வது இப்பண்டிகையின் சிறப்பாகும்.
ஹஜ் பெருநாள் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் செம்மறி ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது.
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதி விவசாயிகளிடமிருந்து ஏராளமான செம்மறி ஆடுகளை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி வந்து அதிரை நகரிலுள்ள வர்த்தகப் பகுதிகளில் விற்பனைக்காக நிறுத்தி வைத்துள்ளனர்.
இவற்றை இஸ்லாமியர்கள் பார்வையிட்டு ஆரோக்கியமான ஆடுகளைத் தேர்வு செய்து விலைக்கு வாங்கி, அவற்றின் மீது முகவரியை அடையாளமிட்டு, வாங்கிய இடத்திலேயே விட்டுச் செல்கின்றனர்.
பிறகு, இந்த ஆட்டை ஹஜ் பெருநாள் பண்டிகையின் முந்தைய நாளில் (செப். 1) மந்தையிலிருந்து வீட்டுக்கு ஓட்டிச் செல்கின்றனர். மறுநாள் (செப். 2) ஹஜ் பெருநாள் பண்டிகை தினத்தன்று காலை சிறப்புத் தொழுகைக்குப் பிறகு வியாபாரியிடமிருந்து வாங்கி வந்த ஆடு அறுக்கப்படுகிறது. இவ்வாறு அறுத்து எடுக்கப்படும் ஆட்டிறைச்சியை குர்பானி இறைச்சி என்று அழைக்கின்றனர். இந்த குர்பானி இறைச்சியை 3 பங்காக சமமாகப் பிரித்து ஒரு பங்கை தனது குடும்பத்துக்கும், 2-வது பங்கை உறவினர்களுக்கும், 3-வது பங்கை வறியவர்களுக்கும் இஸ்லாமியர்கள் தானமாக வழங்கி ஹஜ் பெருநாள் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.
ஆடு விற்பனை குறித்து அதிராம்பட்டினம் நிஜாம் மட்டன் ஸ்டால் உரிமையாளர் கே. ராஜிக் முகமது கூறியது;
தியாகத் திருநாள் ஹஜ் பெருநாள் பண்டிகைக்கு 1 வாரத்துக்கு முன்னதாகவே அதிராம்பட்டினத்தில் செம்மறி ஆடுகள் விற்பனை தொடங்கிவிடும். தினமும் வாடிக்கையாளர்கள் பார்ப்பதற்காக ஆடுகளை திடலில் மேயவிடுவோம். இவற்றைப் பார்வையிடும் வாடிக்கையாளர்கள் ஆரோக்கியமான ஆடுகளைத் தேர்வு செய்து விலைக்கு வாங்கிச் செல்வர். சராசரியாக 16 முதல் 30 கிலோ வரை எடையுள்ள ஒரு ஆடு ரூ. 6 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரை விலை போகிறது. இந்த விற்பனை ஹஜ் பெருநாள் பண்டிகை நாளான செப். 2-ம் தேதி வரை தொடரும் என்றார்.
ஹஜ் பெருநாள் பண்டிகையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் செம்மறி ஆடுகள் விற்பனை களைகட்டத் தொடங்கி உள்ளது.
இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான ஹஜ் பெருநாள் பண்டிகை செப்டம்பர் 2-ம் தேதி தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இஸ்லாமியர்கள் ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் குர்பானி இறைச்சியை தானமாக வழங்கி மகிழ்வது இப்பண்டிகையின் சிறப்பாகும்.
ஹஜ் பெருநாள் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் செம்மறி ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது.
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதி விவசாயிகளிடமிருந்து ஏராளமான செம்மறி ஆடுகளை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி வந்து அதிரை நகரிலுள்ள வர்த்தகப் பகுதிகளில் விற்பனைக்காக நிறுத்தி வைத்துள்ளனர்.
இவற்றை இஸ்லாமியர்கள் பார்வையிட்டு ஆரோக்கியமான ஆடுகளைத் தேர்வு செய்து விலைக்கு வாங்கி, அவற்றின் மீது முகவரியை அடையாளமிட்டு, வாங்கிய இடத்திலேயே விட்டுச் செல்கின்றனர்.
பிறகு, இந்த ஆட்டை ஹஜ் பெருநாள் பண்டிகையின் முந்தைய நாளில் (செப். 1) மந்தையிலிருந்து வீட்டுக்கு ஓட்டிச் செல்கின்றனர். மறுநாள் (செப். 2) ஹஜ் பெருநாள் பண்டிகை தினத்தன்று காலை சிறப்புத் தொழுகைக்குப் பிறகு வியாபாரியிடமிருந்து வாங்கி வந்த ஆடு அறுக்கப்படுகிறது. இவ்வாறு அறுத்து எடுக்கப்படும் ஆட்டிறைச்சியை குர்பானி இறைச்சி என்று அழைக்கின்றனர். இந்த குர்பானி இறைச்சியை 3 பங்காக சமமாகப் பிரித்து ஒரு பங்கை தனது குடும்பத்துக்கும், 2-வது பங்கை உறவினர்களுக்கும், 3-வது பங்கை வறியவர்களுக்கும் இஸ்லாமியர்கள் தானமாக வழங்கி ஹஜ் பெருநாள் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.
ஆடு விற்பனை குறித்து அதிராம்பட்டினம் நிஜாம் மட்டன் ஸ்டால் உரிமையாளர் கே. ராஜிக் முகமது கூறியது;
தியாகத் திருநாள் ஹஜ் பெருநாள் பண்டிகைக்கு 1 வாரத்துக்கு முன்னதாகவே அதிராம்பட்டினத்தில் செம்மறி ஆடுகள் விற்பனை தொடங்கிவிடும். தினமும் வாடிக்கையாளர்கள் பார்ப்பதற்காக ஆடுகளை திடலில் மேயவிடுவோம். இவற்றைப் பார்வையிடும் வாடிக்கையாளர்கள் ஆரோக்கியமான ஆடுகளைத் தேர்வு செய்து விலைக்கு வாங்கிச் செல்வர். சராசரியாக 16 முதல் 30 கிலோ வரை எடையுள்ள ஒரு ஆடு ரூ. 6 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரை விலை போகிறது. இந்த விற்பனை ஹஜ் பெருநாள் பண்டிகை நாளான செப். 2-ம் தேதி வரை தொடரும் என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.