அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கத் நிர்வாகத் தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன் படி, தற்போதைய நிர்வாகிகளுக்கான பதவிக்காலம் வருகிற செப். 15 ந் தேதியுடன் முடிவு பெற உள்ளதை அடுத்து, வரும் செப். 5 ந் தேதி, சங்க அலுவலகத்தில் நிர்வாகத் தேர்வு நடைபெற உள்ளது. இதையொட்டி, தலைவர், துணைத்தலைவர், செயலாளர், துணைச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட 5 நிர்வாகப் பதவிகளுக்கு போட்டியிட விரும்பும் நபர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சம்சுல் இஸ்லாம் சங்க செயற்குழு கூட்டம் சங்க வளாகத்தில் இன்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் ஹாஜி முகமது ஹசன் தலைமை வகித்தார். செயலர் பேராசிரியர் ஹாஜி எம்.ஏ முகமது அப்துல் காதர், பொருளாளர் ஹாஜி ஜலீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வரும் செப்.5 ந் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் தேர்வு தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்வது என தீர்மானிக்கப்பட்டன. கூட்டத்தில் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.