.

Pages

Monday, August 28, 2017

ஹஜ் செய்திகள்: மன்னர் சல்மான் ஹஜ் விருந்தினர்கள் 1300 பேர் வருகை !

அதிரை நியூஸ்: ஆக. 28
சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் அவர்களின் ஹஜ் விருந்தினர் திட்டத்தின் கீழ் 80 உலக நாடுகளிலிருந்து இந்த வருடம் சுமார் 1300 பேருக்கு ஹஜ் செய்திடும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதுவரை 1279 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை தந்துள்ளனர் எஞ்சிய 21 நபர்கள் அமெரிக்கா மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இன்று வருகை தரவுள்ளனர்.

1977 முதல் ஹஜ் செய்யும் வாய்ப்பை பெற்ற பாலஸ்தீனிய முஸ்லீம்கள்:
1948 ஆம் ஆண்டு நடைபெற்ற பாலஸ்தீனிய மண் ஆக்கிரமிப்பு, கள்ளத்தனமாக உருவாக்கப்பட்ட இஸ்ரேல் மற்றும் போரால் தனிமைப்படுத்தப்பட்ட பாலஸ்தீன் முஸ்லீம்களும், கள்ளத்தனமாக உருவாக்கப்பட்ட நாட்டின் குடிமக்களாக வழுக்கட்டாயமாக மாறிய பாலஸ்தீன்முஸ்லீம்களுக்கும் 1948 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரை ஹஜ் செய்திடும் பாக்கியம் இல்லாமலிருந்தது.

பின்பு அரபு லீக் நாடுகள் தலையிட்டதன் பேரில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் ஜோர்டான் நாட்டின் தற்காலிக பாஸ்போர்ட்களை பெற்றுக் கொண்டு தரைமார்க்கமாக பஸ்ஸில் பயணித்து ஹஜ் செய்திடும் வாய்ப்பை பெற்றனர். இந்நிலையில் பஸ் பயணத்திற்குப் பதிலாக விமான பயணம் மூலம் ஹஜ் செய்ய இஸ்ரேலிய குடிமக்கள் என அடையாளப்படுத்தப்படும் பாலஸ்தீன முஸ்லீம்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த வருடம் 4,500 பாலஸ்தீன முஸ்லீம்கள் ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதற்காக வருகை தந்துள்ளனர்.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.