.

Pages

Thursday, August 24, 2017

எச்சரிக்கை பதிவு: அதிராம்பட்டினம் பிரதான சாலைகளில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் !

அதிராம்பட்டினம், ஆக. 24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பிரதான பகுதிகளின் சாலைகளில், தினமும் குவியும் குப்பைக் கழிவுகள் அள்ளப்படாததால் துர் நாற்றம் வீசுவதாகவும், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர். தேங்கி காணப்படும் குப்பைக் கூளங்களை உடனடியாக அப்புறப்படுத்தமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதிராம்பட்டினம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட நடுத்தெரு, மேலத்தெரு, கீழத்தெரு, சி.எம்.பி லேன் கடற்கரைத் தெரு, தரகர் தெரு, புதுத்தெரு உள்ளிட்ட பிரதான பகுதிகளில் குப்பைக் கழிவுகள் அள்ளப்படாமல் சாலைகளில் சிதறிக் கிடப்பதால், துர் நாற்றம் வீசி வருவதாகவும், இவற்றை ஆடு, மாடுகள் கிளறுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக கூறி பொதுமக்கள் கலக்கடைந்தனர்.

இதுதொடர்பாக, அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம், கவனத்தில் எடுத்துக்கொண்டு துப்புரவு பணியாளர்களை சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி தேங்கி காணப்படும் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.