.

Pages

Monday, August 28, 2017

துபையில் ஹஜ்ஜூப் பெருநாள் விடுமுறை இலவச பார்க்கிங் அறிவிப்பு !

அதிரை நியூஸ்: ஆக. 28
பொதுவிடுமுறையை முன்னிட்டு துபைக்கு நாளொன்றுக்கு சுமார் 350,000 பேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு துபையில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 3 வரையிலான 4 நாட்களுக்கு இலவச பார்க்கிங் அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் அடுக்குமாடி பார்க்கிங்குகளில் மட்டும் வழமைபோல் கட்டணம் வசூலிக்கப்படும்.

துபை போக்குவரத்துத் துறையின் வாடிக்கையாளர் 'ஹேப்பினஸ்' மையங்களும் மேற்காணும் தேதியில் மூடப்பட்டிருக்கும்.

மெட்ரோ ரயில் நேரங்கள்:
ரெட் லைன்: 
ஆகஸ்ட் 31 : காலை 5.30 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை.
செப்டம்பர் 1 : காலை 10 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை.
செப்டம்பர் 2 : காலை 5.50 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை.
செப்டம்பர் 3 : காலை 5.30 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை.

குறிப்பு: நள்ளிரவு 2 மணி என்பது அடுத்த நாள் அதிகாலை நேரத்தை குறிக்கும். செப். 2 அன்று மெட்ரோ எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டும் இயங்காது.

கிரீன்; லைன்: 
ஆகஸ்ட் 31 : காலை 5.50 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை.
செப்டம்பர் 1 : காலை 10 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை.
செப்டம்பர் 2 : காலை 5.50 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை.
செப்டம்பர் 3 : காலை 5.50 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.