.

Pages

Tuesday, August 22, 2017

பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் ஆங்கில மொழித்திறன் கண்காட்சி !

அதிராம்பட்டினம், ஆக. 22
அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளுர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் ஆங்கில மொழித்திறன் கண்காட்சி விழா இன்று செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பள்ளித் தாளாளர் வீ. சுப்பிரமணியன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் ஆர். ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்திரனாக எஸ். சுப்பையன் கலந்து கொண்டார்.

ஆங்கில மொழியில் உரையாடி சிறப்பிடம் பெற்ற 53 மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயனடைந்தனர். இதில்,
ஆங்கில மொழி பயிற்றுநர்கள் அருண்குமார், விவேக், ஹாஜா நவாஸ் மற்றும் ஏனைய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.