.

Pages

Sunday, August 20, 2017

திங்கட்கிழமை துல் ஹஜ் பிறையை தேடுமாறு சவுதி அரேபியா நீதிமன்றம் வேண்டுகோள் !

அதிரை நியூஸ்: ஆக. 20
எதிர்வரும் திங்கட்கிழமை துல்காயிதா பிறை 29 நிறைவுறுவதால் அன்று மஃரிப் நேரத்தில் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறையை தேடுமாறு தனது நாட்டில் வாழும் முஸ்லீம்களை சவுதி அரேபியாவின் சுப்ரீம் கோர்ட் கேட்டுக் கொண்டுள்ளது.

பிறை தங்களது கண்களால் நேரயாகவோ அல்லது பைனாகுலர் போன்ற தொலைநோக்கிகள் வழியாகவோ காண்பவர்கள் உடனடியாக தகுந்த சாட்சிகள் மற்றும் சத்திய பிரமாணத்துடன் அருகிலுள்ள நீதிமன்றங்கள் அல்லது அரசு மையங்களை அணுகி அதன் வழியாக நீதிமன்றங்களுக்கு தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் திங்கட்கிழமை அன்று பிறை கண்டது உறுதி செய்யப்பட்டால் எதிர்வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி அரஃபா தினமாகவும், செப்டம்பர் 1 ஆம் தேதி ஹஜ்ஜூப் பெருநாள் தினமாகவும் அனுசரிக்கப்படும்.

திங்கள் அன்று பிறை தென்படாவிட்டால் துல்காயிதா பிறை 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டு செப். 1 அரஃபா தினமாகவும், செப். 2 அன்று ஹஜ்ஜூப் பெருநாளாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

வழமையாக, சவுதியின் பிறை அறிவிப்பை பின்பற்றியே அமீரகத்திலும் பெருநாள் தினங்கள் அனுசரிக்கப்படுகின்றன.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.