அதிராம்பட்டினம், ஆக. 29
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீத்தடுப்பு மற்றும் உயிர் மீட்பு செயல்முறை விளக்கம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் திங்கட்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் வருவாய் ஆய்வாளர் உமர்சா தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர்கள் ஆனந்த ஜோதி, மகர ஜோதி முன்னிலை வகித்தனர்.
இதில், பேரிடர் விபத்து மீட்பு பணி செயல்முறை விளக்கத்தில் வெடி விபத்துக்கள் ஏற்படும் பொழுது செய்யப்பட வேண்டிய முதலுதவி, மனித உயிர்களை பாதுகாக்கும் முறைகளும் விளக்கப்பட்டது. குடிசை பகுதிகளில் ஏற்படுகின்ற தீ விபத்துகள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களில் ஏற்படுகின்ற தீ விபத்துகளின் போதும் தீயணைக்கும் முறையினை பற்றி செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில், பேராவூரணி தீயனைப்பு நிலைய அலுவலர் தியாகராஜன் தலைமையில், பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய குழுவினர்கள் கலந்து கொண்டு பயிற்சிகளை அளித்தனர். இந்நிகழ்ச்சியில், பொதுமக்கள், அரசு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.