.

Pages

Monday, August 21, 2017

தென்னிந்திய அளவிலான பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற காதிர் முகைதீன் கல்லூரி மாணவிக்கு பாராட்டு !

அதிராம்பட்டினம், ஆக. 21
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதலாமாண்டு பி.பி.ஏ. மாணவி எஸ். லோகப்பிரியா, கேரள மாநிலம் ஆழப்புழையில் 13.08.2017 முதல் 19.08.2017 ஆகிய தினங்கள் நடைபெற்ற தென் இந்திய அளவிலான பளு தூக்கும் ( Power Lifting ) போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். இவர் தங்கப்பதக்கத்துடன் இரும்பு பெண்மணி பட்டத்தையும் பெற்றுள்ளார்.
மேலும் இவர் ஆசிய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தகுதிப் பெற்றுள்ளார்.

வெற்றிப் பெற்ற மாணவி எஸ்.லோகப்பிரியாவை கல்லூரிச் செயலர் எஸ்.ஜே.அபுல் ஹசன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும் அம்மாணவியை கல்லூரி முதல்வர் ஏ.முகம்மது முகைதீன், உடற்கல்வி இயக்குநர் கே. முருகானந்தம், வணிக ஆட்சியியல் துறைத் தலைவர் ஓ.எம் ஹாஜா முகைதீன், உடற்கல்வித் துறை கன்வீனர் எஸ். சாகுல் ஹமீது மற்றும் பேராசிரியர்கள், அலுவலக, ஆய்வக பணியாளர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.