.

Pages

Thursday, August 31, 2017

இரவில் குறைந்த மின் அழுத்தத்தால் பிலால் நகர் மக்கள் அவதி !

அதிராம்பட்டினம், ஆக. 31
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் துணை மின்நிலையத்தில் இருந்து, ஏரிப்புறக்கரை கிராம ஊராட்சி, பிலால் நகர் பகுதிக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இந்தப் பகுதியில் இரவு நேரங்களில் குறைந்த மின் அழுத்தப் பிரச்னை இருப்பதால் பொதுமக்கள் அவதி. 250 கே.வி திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைத்து தரக் கோரிக்கை.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறியது;
அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச்சாலை பிலால் நகர் பகுதியில் அமைந்துள்ள மின்மாற்றி 100 கே.வி திறன் கொண்டது. இம்மின்மாற்றியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புதாரர்கள், பெட்ரோல் நிலையம், வெல்டிங் பட்டறைகள் உள்ளிட்ட சில தொழிற்கூடங்கள் மின் இணைப்புகளை பெற்றுள்ளன. இதனால் அதிக மின் அழுத்தம் ஏற்பட்டு அடிக்கடி மின்மாற்றியில் பழுது ஏற்படுகிறது. இரவு நேரங்களில் குறைந்தழுத்த மின்சாரம் வருவதால், டியூப் லைட் சரியாக எரிவது இல்லை. மின்விசிறிகள், ஏசி, ஃபிரிஜ் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள் சரிவர இயங்கவில்லை. இதனால் வீடுகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவு நேரங்களில் தூக்கம் இல்லாமல் அவதிக்குள்ளாகின்றனர்.

இந்த குறைபாட்டை போக்க, 250 கே.வி திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைத்து, அதில் தொழிற்கூடங்களுக்கும், குடியிருப்புகளுக்கும் தனித்தனியாக பீடர் லைன் அமைத்து தர உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.