.

Pages

Wednesday, August 30, 2017

மல்லிபட்டினத்தில் புதிய மருத்துவமனை திறப்பு ( படங்கள் )

மல்லிபட்டினம், ஆக.30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள மல்லிபட்டினம் ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள மரியம் வணிக கட்டிடத்தில் புதிதாக ராஜவா விஸ்வா மருத்துவமனை மற்றும் பூர்ணி விஜயம் மருந்தகம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில், சிறப்பு விருந்தினராக மிராசுதார் சு. ராஜாதம்பி கலந்துகொண்டு மருத்துவமனையை திறந்து வைத்து வாழ்த்திப் பேசினார். திறப்பு விழாவையொட்டி இலவச பொதுநல மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில்
மருத்துவமனை தலைமை மருத்துவர் எஸ்.ஆர் சந்திரசேகர் தலைமையில், ராஜவா விஸ்வா மருத்துவமனை மருத்துவக் குழுவினர் இரத்தப் பரிசோதனை, சர்க்கரை அளவு கண்டறிதல், இரத்தக்கொதிப்பு, உடல் எடை பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டனர். முகாமில் மருத்துவ ஆலோசனை மற்றும் இலவச மருந்துகள் வழங்கப்பட்டன. இம்முகாமில் மல்லிபட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

விழாவில், சிறப்பு அழைப்பின் பேரில் பட்டுக்கோட்டை நகராட்சி முன்னாள் சேர்மன் எஸ்.ஆர் ஜவஹர் பாபு, தமிழ்நாடு விசைப்படகு மீனவர் சங்க மாநிலச் செயலாளர் தாஜுதீன், மருத்துவர்கள் பன்னீர் செல்வம், ஷக்கில் அகமது, மரியம் காம்ப்ளக்ஸ் உரிமையாளர் ஏ.சரபுதீன் உட்பட ஏராளமான மருத்துவர்கள் மற்றும் மல்லிபட்டினம் பிரமுகர்கள், கிராம பஞ்சாயத்தார்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.