.

Pages

Saturday, August 26, 2017

சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் பதவிக்கு, தமுமுக 'ஆதம்' செய்யது முகமது புஹாரி விருப்ப மனு தாக்கல் !

அதிராம்பட்டினம், ஆக. 26
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் புதுமனைத்தெருவில் அமைந்துள்ள சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் பதவிக்கு, தமுமுக 'ஆதம்' செய்யது முகமது புஹாரி விருப்ப மனுவை சனிக்கிழமை மாலை தாக்கல் செய்தார்.

அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கத் நிர்வாகத் தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி, தற்போதைய நிர்வாகிகளுக்கான பதவிக்காலம் வருகிற செப். 15 ந் தேதியுடன் முடிவு பெற உள்ளதை அடுத்து, வரும் செப். 5 ந் தேதி, சங்க அலுவலகத்தில் நிர்வாகத் தேர்வு நடைபெற உள்ளது. இதையொட்டி, தலைவர், துணைத்தலைவர், செயலாளர், துணைச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட 5 நிர்வாகப் பதவிகளுக்கு போட்டியிட விரும்பும் நபர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவை சேர்ந்த தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தஞ்சை மாவட்ட முன்னாள் பொருளாளர், தற்போதைய மாவட்டத் துணைத்தலைவருமாகிய 'ஆதம்' செய்யது முகமது புஹாரி, சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து, சங்கத் தலைவர் ஹாஜி முகம்மது ஹசன் அவர்களிடம் இன்று சனிக்கிழமை மாலை விருப்ப மனுவை அளித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.