.

Pages

Tuesday, August 22, 2017

சவுதி அபஹா நகரில் புகை பிடிப்போருக்கான சிகிச்சை மையம் திறப்பு

அதிரை நியூஸ்: ஆக. 22
உலக சுகாதார மையத்தின் அறிக்கையின்படி, ஆண்டுக்கு சுமார் 7 மில்லியன் உலக மக்கள் புகை பிடிப்பு மற்றும் பல்வேறு புகையிலை பழக்கங்களால் உயிரிழக்கின்றனர். சவுதி அரேபியாவில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 70,000 பேர் புகை பழக்கத்தால் உயிரிழக்கின்றனர்.

எனவே, புகைப்பழக்கத்திற்கு எதிரான பிரச்சாராங்களை ஒருபுறம் துவக்கியுள்ள சவுதி சுகாதாரத்துறை புகைப்பிடிக்கும் ஆண், பெண் நோயாளிகளை குணப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 31 சிகிச்சை மையங்களை பல்வேறு அரசு மருத்துவமனைகளில் துவக்கியுள்ளனர். அதனடிப்படையில், அபஹா நகரில் ஆண், பெண் என இருபாலாருக்கும் தனித்தனியே சிகிச்சையளிக்கும் மையங்களை துவக்கியுள்ளதுடன், இங்கு 3 மாதங்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவோர் புகைப்பழக்கத்தை மறந்த புது மனிதர்களாக வீடு திரும்பலாம்.

மேலும், சவுதி வாழ் மக்கள் மத்தியிலிருந்து புகைப்பழக்கத்தை ஒழிப்பதற்காக கடந்த ஜூன் மாதம் முதல் சிகரெட் விலையின் மீது காலல் வரிகள் 2 மடங்காக உயர்த்தப்பட்டது. அதேபோல், சவுதி அரசின் பட்ஜெட்டிலும் புகை பழக்கங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக ஓரளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.